Sandhya Raagam Serial Today's Episode:  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் (Zee Tamil Serial) ஒளிப்பரப்பாகி வரும் சீதாராமன், நளதமயந்தி, மாரி, அண்ணா, கார்த்திகை தீபம், மீனாட்சி பொண்ணுங்க போன்ற தொடர்களும் பார்வையாளர்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளன. அதில், சந்தியா ராகம் சீரியலும் பரவலான கவனத்தை பெற்றுள்ளது. சந்தியா ராகம் சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் தனலட்சுமி பேஸ்புக் மோகத்தில் பிரவுசிங் சென்டர் சென்றிருக்க அங்கு ரகுராம் வந்து விட ஒருவழியாக எஸ்கேப் ஆன நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 



பேஸ்புக் மோகத்தில் பிரச்சனையில் சிக்க போகும் தனம்.. மாட்ட போகும் மாயா? - சந்தியா ராகம் இன்றைய எபிசோட் அப்டேட்  


மறுநாள் காலையில் தனலட்சுமி சாப்பிட்டு கொண்டிருக்கும் போது பேஸ்புக் குறித்து யோசித்து கொண்டே சாப்பிட எல்லாவற்றிலும் தடுமாறுகிறாள். ரகுராம் என்னாச்சு என்று கேட்க ஒன்னும் இல்ல பா என்று சொல்லி அங்கிருந்து எழுந்து செல்ல ஜானகி என்னடி ஆச்சு என்று கேட்க எக்ஸாம்க்கு படிக்கணும் மா என்று சொல்லி சமாளிக்க அவர் படிக்கணும்னா போய் படி என்று அனுப்பி வைக்கிறாள்.


மேலும் படிக்க | கமலை ஓரம் கட்டும் பிக்பாஸ்! 5 நடிகர்களை தேர்வு செய்துள்ள நிறுவனம்!


பிறகு ரகுராமிடம் எக்ஸாம்க்கு படிக்கலைனு பதற்றமாக இருக்கா என்று சொல்ல அவ நல்லா படிக்கிற பொண்ணு தானே, எல்லாம் இந்த மாயா வந்த பிறகு தான் இப்படி மாறிட்டா என்று சொல்லி மாயாவை திட்டுகின்றனர். ரூமுக்குள் வந்த தனம் மாயா போனை எடுத்து பவானிக்கு போன் செய்து என்னடி ஏதாவது ரெக்வஸ்ட் வந்திருக்கா என்று கேட்க அது நீ தான்டி பார்க்கணும் என்று சொல்ல எப்படி என்று கேட்க பாஸ்வேர்ட் போட்டு பாரு என்று சொல்கிறாள். 


இந்த நேரம் பார்த்து ரூமுக்குள் வரும் மாயா என் போன் எடுத்து யார்கிட்ட பேசிட்டு இருக்கடி, எல்லாத்துக்கும்  நான் தான் காரணம்னு சொல்றாங்க போய் படி என்று போனை பிடிங்கி கொள்ள மாயா தூங்கிய பிறகு அவளது லேப்டாப்பை எடுத்து பாஸ்வேர்ட் போட்டு முகநூலில் நுழைய மறுபக்கம் இருந்து சுரேஷ் ரெக்வஸ்ட் கொடுக்க  தனம் அக்செப்ட் செய்கிறாள். 


உடனே சுரேஷ் தன்னுடைய நண்பர்களுக்கு போன் செய்து ஒரு பொண்ணு சிக்கி இருக்கா, அவளை தனியா வர வைத்து கேமரா செட் பண்ணி வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிக்கலாம் என பிளான் போடுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


மேலும் படிக்க | சூர்யாவிற்கு திடீர் என நன்றி தெரிவித்த இயக்குனர் அமீர்! ஏன் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ