தனியார் தொலைக்காட்சியில் காமெடியனாக தனது வாழ்க்கையை ஆரம்பித்து பின்பு சினிமாவில் காமெடியனாக கலக்க ஆரம்பித்தார்.  விஜய், அஜித், சூர்யா, விஷால், ஆர்யா, சிம்பு என தமிழ் சினிமாவில் உள்ள கிட்ட தட்ட அனைத்து ஹீரோக்களுடன் நடித்து உள்ளார்.  ராஜேஷின் ஒரு கல் ஒரு கண்ணாடி, சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்களில் ஹீரோக்களுக்கு இணையாக தனது பங்கை அளித்து இருப்பார் சந்தானம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பின்பு 2015ம் ஆண்டு இனிமே இப்படித்தான் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் சந்தானம்.  அதன் பிறகு காமெடியனாக நடிப்பதை தவிர்த்து வருகிறார்.  இதனால் பல ஹீரோக்கள் சந்தானத்தின் மீது கோவமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.  இதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருகிறார்.  முதலில் முழுக்க முழுக்க காமெடி கதைகளில் நடித்து வந்த சந்தானம் சிறிது சிறிதாக தன்னை மெருகேற்றி கொண்டார்.



காமெடி, ஆக்சன், செண்டிமெண்ட் என்று கமர்சியல் ஹீரோவாக தன்னை தமிழ் சினிமாவில் மாற்றி கொண்டுள்ளார்.  கடந்த பிப்ரவரி மாதம் சந்தானம் நடிப்பில் வெளிவந்த பாரிஸ் ஜெயராஜ் திரைப்படம் திரையரங்கில் ஹிட் அடித்தது.  அதன் பின் கடந்த மாதம் ஜீ-யின் ஓடிடி தளத்தில் அறிமுக இயக்குனர் கார்த்தி யோகி இயக்கத்தில் டிக்கிலோனா திரைப்படம் வெளியானது.  ரசிகர்களிடையே இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.  குறிப்பாக இப்படத்தில் இடம் பெற்ற காட்சிகள் மீம் மெட்டிரியலாக மாறியது.  "நீ என்ன இன்னும் பைத்தியக்காரனா தானே நெனச்சுட்டு இருக்க" என்ற வசனம் இணையத்தில் திரும்பும் திசையெல்லாம் காணப்பட்டது.  தற்போது டிக்கிலோனா திரைப்படம் இணையத்தில் மட்டும் 2.5 கோடி மக்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.



ALSO READ டாக்டர் படத்தில் எனக்கு 10 டயலாக்தான் – சிவகார்த்திகேயன்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR