தமிழக அரசியல் மாற்றம் குறித்தும், ஜல்லிக்கட்டு குறித்தும், நடிகர் கமல்ஹாசன் அன்றாடம் தன் டிவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டு வருகிறார். இது தமிழக அரசியல் 
மற்றும் திரையுலக வட்டாரத்தில் மிகப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்போது சசிகலா முதல்-அமைச்சராக தேர்ந்து எடுக்கப்பட்ட நிலையில் கமல் ஹாசன் அவரது டுவிட்டர் பக்கத்தில்“பீலிபெய் சாகாடும் அச்சிறும்அப்பண்டம் சால மிகுத்துப்பெறின்” என்ற திருக்குறளை வெளியிட்டிருந்தார்.


 



 


 


இந்தக் குறளுக்கு அர்த்தம் பின்வருமாறு: மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும், அந்தப் பண்டமும் அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால், அச்சு முறியும்' என்பதாகும். கமல்ஹாசன் வெளியிட்டுள்ள இந்தக் கருத்து, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.