தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீதா ராமன் : இன்றைய எபிசோட்


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். 


இந்த சீரியல் நேற்று எபிசோட்டில் சீதா சொப்னாவை காட்டி சுபாஷை மிரட்டிய நிலையில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


பைத்தியம் போல் உளறும் சுபாஷ்


சுபாஷ் படிக்கட்டு அருகே ஒளிந்து கொண்டிருக்க மகா டீம் அவரை கண்டுபிடித்து விடுகிறது. சுபாஷ் பைத்தியம் போல உளற ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்லலாம் என்று முடிவெடுக்க அவன் வேண்டாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு சேதுவிடம் மீரா உனக்கும் எனக்கும் தங்கச்சி தானே? நம்ம மூணு பேரும் ஒரே வயித்துல தானே பிறந்தோம், அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது நம்முடைய கடமை தான் என்று பேசுகிறான். யாருக்கும் தெரியாமல் சீதா ஒளிந்து கொண்டு தொடர்ந்து சுபாஷை மிரட்டுகிறாள். 


கோபத்துடன் பேசும் மகா


சுபாஷ் பேசுவதை கேட்டு மகா, சேது என இருவரும் அதிர்ச்சி அடைந்து இதெல்லாம் நடக்காத விஷயம் என்று மேலே சென்று விடுகின்றனர். மேலே போன இவர்கள் சுபாஷ் என்ன பேசுறான் இந்த சத்தியன் நம்ம கிட்ட வேலை செய்தவன், அவனுக்கு நம்ம வீட்டு பொண்ண குடுக்கணுமா என்று கோபத்துடன் பேசிக் கொண்டிருக்கின்றனர்.


மறுபக்கம் சுபாஷ் அர்ச்சனாவிடம் இந்த கல்யாணம் மட்டும் நடக்கலனா மேலிருந்து கீழே குதிச்சு செத்துப் போயிடுவேன் என்று மிரட்டுகிறான்.



நாம ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும்னா இந்த கல்யாணம் நடக்கணும், மகாவிடம் பேசி சம்மதிக்க வை என தூது அனுப்புகிறான். 


மறுபக்கம் எல்லோரும் சீதாவிடம் என்ன இந்த நிச்சயம் நடக்குமா நடக்காதா என்று கேட்டுக் கொண்டிருக்க கண்டிப்பாக நடக்கும் என்று சொல்ல ராமும் சீதா சொன்னால் நடக்கும் என்று சொல்கிறான். 


மேலும் படிக்க | D51 படத்தின் முக்கிய அப்டேட்: தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா


அடுத்ததாக மகாவிடம் வரும் அர்ச்சனா இந்த கல்யாணம் நடக்கலனா சுபாஷ் மொட்டை மாடியில் இருந்து குதித்து தற்கொலை பண்ணிப்பேனு சொல்றாரு என்று பேசி பேசி அவர்களை சம்மதிக்க வைக்கிறாள். 


கம்பளி போர்த்திக்கொண்டு வரும் சுபாஷ்


கொஞ்ச நேரத்தில் வெளியே வந்து உட்கார்ந்து நீ ஆரம்பித்து வைத்தது தானே நீயே நடத்துவ என்று சீதாவிடம் சொல்ல எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர்.



அதோடு இல்லாமல் சுபாஷை பற்றி விசாரிக்க அவன் தலையில் முகத்தை மறைத்து கம்பளி போத்திக் கொண்டு வந்து உட்காருகிறான். 


காணத்தவறாதீர்கள்


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?


சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | க்ளைமாக்ஸில் ரஜினியின் சூப்பர் மாஸ் சீன்! ஜெயிலர் படத்தின் டெலீடெட் காட்சிகள்


 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ