தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீதா ராமன் : இன்றைய எபிசோட்


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். 


இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ராம், மீரா, சீதா ஆகியோர் சத்யன் வீட்டிற்கு வந்திருக்கும் நிலையில் சத்தியன் நான் மகா ஆபிசில் தான் வேலை செய்தேன், அப்போ தான் மீரா மீது காதல் வந்தது.. ஆனால் மகா எனக்கு வசதி இல்லனு மீராவை கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க, அதன் பிறகு தனியா பிசினஸ் ஆரம்பித்து வளர்ந்து திரும்பவும் மீராவை கேட்டும் மகா கொடுக்கல என்று காதல் கதையை சொல்ல மீராஇதை கேட்டு கண் கலங்குகிறாள். 


சத்யன் வீட்டுக்கு செல்லும் மகா, அர்ச்சனா


அடுத்ததாக மகாவும் அர்ச்சனாவும் கம்பெனியில் இருந்து இன்வெஸ்டர்ஸ் வெளிய போக அந்த சத்யன் தான் காரணம் என கோபத்தோடு கிளம்பி சத்யன் வீட்டிற்கு வர அங்கு ராம், சீதா மற்றும் மீரா ஆகியோர் இருப்பதாய் பார்த்து அதிர்ச்சி அடைகிறாள், சத்யன் வாங்க என்று வரவேற்க மகா நான் ஒன்னும் இங்க சம்மந்தம் பேச வரல என்று கோபப்படுகிறாள். 



மேலும் படிக்க | பார்பியாக மாறிய கீர்த்தி! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!


மீரா காதல் பற்றி பேசும் ராம்


மேலும் மீராவை பார்த்து நீ என்ன இங்க வந்து குடித்தனம் நடத்திட்டு இருக்க என்று கேவலப்படுத்தி பேச சீதா நீங்க முறையா கல்யாணம் பண்ணி வச்சிருந்தா அவங்க ஏன் வர போறாங்க என்று கேட்க இந்த ஜென்மத்துல இவங்களுக்கு கல்யாணம் நடக்காது என்று சொல்ல ராம் அவங்க லவ் பண்ணுறாங்க சேர்த்து வைக்க வேண்டியது தானே என்று சொல்ல மகா நான் உயிரோட இருக்க வரைக்கும் அது நடக்காது என்று சொல்கிறாள். 



சீதா நடக்கும், நாங்க நடத்தி வைப்போம் என்று சவால் விட வீட்டுக்கு மகா கோபமாக வருகிறாள், வீட்டுக்கு வந்ததும் கையில் துப்பாக்கியுடன் ஆவேசமாக உட்கார்ந்திருக்க ராம், சீதா, மீரா என மூவரும் வீட்டுக்கு வர மகா உள்ள காலை வச்சா சுட்டுடுவேன் என்று மிரட்ட ராம் நான் உள்ள போலாமா என்று கேட்க மகா உள்ளே போகலாம் என்று சொல்ல ராம் உள்ளே சென்று விடுகிறான். 


ஷாக் கொடுக்கும் ராம்


இதனால் மீராவும் சீதாவும் அதிர்ச்சி அடைகிறார்கள், மகா இன்னையோட உங்களுக்கும் இந்த வீட்டுக்குமான உறவு முடிஞ்சு போச்சு.. ராம் இந்த வீட்டு பையன் அவனை எல்லாம் உங்க பக்கம் இழுக்க முடியாது மகா வீர வசனம் பேச பேக்குடன் வெளியே வரும் ராம் சீதா இல்லாத இடத்துல நான் இருக்க மாட்டேன் என்று ஷாக் கொடுக்கிறான். 


காணத்தவறாதீர்கள்


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


சீதா ராமன்: : சீரியலை எங்கு பார்ப்பது?


சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | 3300 கோடியை கட்டிக்காப்பாற்றிய அரவிந்த் சுவாமி! எப்படி தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ