தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீதா ராமன் : இன்றைய எபிசோட்


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். 


இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சீதா ஸ்டேஷனலில் சென்று ஆஜரான நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.


கோவப்படும் ராஜசேகர்


அதாவது ராஜசேகர் மீராவுக்கு போன் செய்து சீதா எங்கே என்று கேட்க அவ இன்னும் வீட்டிற்கு வரலையா என்று மீரா அதிர்ச்சியாக கேட்க ராஜசேகர் கோபப்பட்டு ராமிடம் போன் கொடுக்க சொல்கிறார். மீரா போன் கொடுக்க ராஜசேகர் சீதாவுக்கு மட்டும் எதாவது ஆச்சுன்னா உங்களை வரதட்சணை கேசில் உள்ள போட்டுடுவேன் என்று மிரட்டுகிறார். 



எல்லா பிரச்னையும் என்னால தான்: வருத்தப்படும் மதுமிதா


அடுத்ததாக ராம் சோகமாக கார்டனில் உட்கார்ந்திருக்க அங்கே வரும் மதுமிதா என்னாச்சு என்று கேட்க ராம் சீதா இல்லாமல் என்னால ஒரு நாள் கூட இருக்க முடியாது, என் அம்மாவுக்கு பிறகு என் வாழ்க்கையில் வெளிச்சத்தை கொடுத்தது சீதா தான், அவளால் தான் நான் சந்தோசமாக இருந்தேன் என வருத்தப்படுகிறான்.



மதுமிதா நான் இந்த வீட்டுக்கு வந்திருக்கவே கூடாது, எல்லா பிரச்னையும் என்னால தான் என்று வருத்தப்பட்டு அங்கிருந்து நகர்ந்து செல்கிறாள். 



மேலும் படிக்க | ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படம் இந்தியில் ரீ-மேக்..? புது பட ட்ரைலரால் ரசிகர்கள் சந்தேகம்..!


மகாவை எச்சரிக்கும் ராஜசேகர்


இதனை தொடர்ந்து ராஜசேகர் சேதுபதிக்கு போன் செய்து மகாவிடம் போன் கொடுக்க சொல்ல அவர் எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லு என்று பேச ராஜசேகர் உங்க எல்லாரையும் என் பொண்ணை வரதட்சனை கொடுமை பண்ணி கொன்னுட்டிங்கனு ஜெயில்ல போட்டுடுவேன் என எச்சரிக்க மகா உங்க பொண்ணு வந்துடுவா என சொல்லி போனை கட் செய்து விடுகிறாள். 


அதன் பிறகு ஜெயிலில் இருந்து வெளியே வரும் சூர்யா தன்னுடைய அண்ணன் சரவணனிடம் எப்படி வெளியே வந்தேன் என்று கேட்க சீதா எல்லாம் நான் தான் செய்தேன் என்று சொல்லி ஜெயிலுக்கு போய் விட்டதாக சொல்கிறான், அதோடு உன்னையும் மதுவையும் சேர்த்து வைக்கணும்னு தான் அவ இப்படி பண்ணா, அவ எந்த தப்பும் பண்ணி இருக்க மாட்டா என்று சொல்கிறார். 



மதுவை கூட்டிட்டு நாம வேற ஊருக்கு போய்டலாம், இந்த ஊர்ல இருக்க வேண்டாம் என்று சொல்ல சூர்யா மகா வீட்டுக்கு வருகிறான், சூர்யாவை பார்த்த மகா அதிர்ச்சி அடைகிறாள். ஆனால் எதையும் வெளியே காட்டி கொள்ளாமல் சூர்யாவிடம் நல்லவள் போல பேசி எப்படி வெளியே வந்த என்று கேட்க சீதா உள்ளே சென்று விட்ட விஷயத்தை சொல்கிறான். 


புதிய சீதா அறிமுகம்



இதனையடுத்து மது வெளியே போய் இருப்பதாக சொல்லி இவர்களை உள்ளே உட்கார வைக்கும் மகா உடனடியாக ஏதாவது பண்ணியாக வேண்டும் என திட்டம் போடுகிறாள். மறுபக்கம் ராம் ஸ்டேஷனுக்கு வந்து ஜெயிலில் இருக்கும் சீதாவை சந்திக்க புது சீதா அறிமுகமாகிறாள். 



காணத்தவறாதீர்கள்


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


சீதா ராமன்: : சீரியலை எங்கு பார்ப்பது?


சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | மாவீரன் முதல் மார்க் ஆண்டனி வரை: ஜூலையில் வெளியாகும் தமிழ் படங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ