தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீதா ராமன் : இன்றைய எபிசோட்


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். 


இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ராம் சீதாவை பார்க்க ஜெயிலுக்கு வர சூர்யா மதுவை பார்க்க மகா வீட்டிற்கு வந்திருந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


அதாவது, சீதா ராமை பார்க்க வெளியே வர சீதாவுடன் இருந்த வயதான பெண் கைதி ஒருவர் ராம், சீதா தான் நல்ல ஜோடி என்று சொல்ல வார்டன் அம்மா அந்த பொண்ணு தப்பு பண்ணிட்டு தானே உள்ள வந்திருக்கு என்று சொல்ல அதெல்லாம் அவ மாமியார் பண்ண வேலை என்று சொல்கிறாள். 


மேலும் படிக்க | உயர்நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ் மனு தாக்கல்! தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு!


நீ தப்பு பண்ணியிருக்க மாட்ட: உறுதியாக கூறும் ராம்


அடுத்து சீதாவும் ராமும் சந்தித்து கொள்ள இருவரும் கண் கலங்கி பீல் செய்ய நான் தப்பு பண்ணேன், அதனால் உள்ள வந்திருக்கேன் என்று சீதா சொல்ல ராம் இல்ல நீ தப்பு பண்ணியிருக்க மாட்ட, அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு என்று சொல்கிறான்.



மேலும் உன்னை வெளியே எடுக்க நான் என்ன பண்ணனும் என்று கேட்க நீங்க எதுவும் பண்ண வேண்டாம் உங்க சித்தியையும் அர்ச்சனாவையும் என்ன வந்து பார்க்க சொல்லுங்க என்று சொல்கிறாள். 



மேலும் நான் சீக்கிரம் வெளியே வருவேன், தப்பு பண்ணவங்க ஜெயிலுக்கு வருவாங்க என்று சொல்கிறாள். மறுபக்கம் மகா கோவிலுக்கு சென்றுள்ள மதுமிதாவுக்கு போன் செய்து சூர்யா சீதாவை ஜெயிலுக்கு அனுப்பி விட்டு வெளியே வந்து விட்டதாக மாற்றி சொல்ல மது கோபப்படுகிறாள்.



மேலும் உன்னை கூட்டிட்டு போக வந்திருப்பதாக சொல்ல எங்க தங்கச்சியை ஜெயிலுக்கு அனுப்புவான், அவன் கூட நான் போய் வாழணுமா? என கொந்தளிக்கிறாள். 



உன்கூட வந்து வாழ முடியாது: சூர்யாவிடம் கோவப்படும் மதுமிதா


அடுத்து வீட்டுக்கு வரும் மதுமிதா சூர்யாவிடம் நீ எப்படி வெளியே வந்த என்று கேட்க சீதா உள்ள போய்ட்டா, அதனால என்ன வெளியே அனுப்பிட்டாங்க என்று சொல்ல என் தங்கச்சி தப்பு பண்ணி இருப்பாளா? என்று கேட்க அப்போ நான் தப்பு பண்ணி இருப்பானா என்று கேட்க இருவருக்கும் இடையே வாக்குவாதம் உருவாகிறது. கோபத்தில் மதுமிதா உன்கூட வந்து வாழ முடியாது என்று சொல்ல சூர்யா அப்படினா நான் கட்டிய தாலியை கழட்டி கொடு என்று கேட்கிறான். 



காணத்தவறாதீர்கள்


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


சீதா ராமன்: : சீரியலை எங்கு பார்ப்பது?


சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | சாதியை வைத்து வாய்ப்பு தருகிறாரா மாரி செல்வராஜ்..? அவரே கொடுத்த விளக்கம்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ