கோலிவுட்டின் பிரபல நடிப்பு ஆசிரியரான மதன் கேப்ரியல், இப்போது இருளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இது இருளர் பழங்குடியினரின் வாழ்க்கை முறையைப் பற்றி பேசும் படமாகும். இருளி குறித்து பேசிய அவர், "ஜெய்பீம் சமீபத்தில் இருளா பழங்குடியினரைப் பற்றி பேசியுள்ளனர். ஆனால் அது ஒரு குறிப்பிட்ட பிரச்சினையை மையமாகக் கொண்டது. இந்த படம் அவர்களின் வாழ்க்கை முறை பற்றி புதிய கான்செப்ட்" எனத் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | எதற்கும் துணிந்தவன்: கிளிம்ஷா? டீசரா? ரசிகர்களின் ரியாக்ஷன்!


அண்மையில் படப்பிடிப்பு தொடங்கிய அவர் படம் குறித்து மேலும் சில முக்கியமான தகவல்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார். "இருளி என்பது காதல் மற்றும் அம்மக்களின் வாழ்வியலை கொண்டிருக்கும். இருளர் இனத்தில் இருந்து பள்ளிக்கு செல்லும் மாணவி, அங்கு எதிர்கொள்ளும் சவால்களைக் கடந்து படிப்பை தொடர்கிறாளா அல்லது திருமணத்தை தேர்ந்தெடுக்கிறாளா? என்பதை பற்றி பேசும். ரஷ்ய நாவலில் இருந்து எடுக்கப்பட்ட சில காட்சிகளை இருளர் மக்களின் வாழ்க்கையோடு தொடர்புபடுத்தியிருக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.



இந்தப் படத்தில் நடிக்கும் 50 விழுக்காட்டுக்கும் மேலானவர்கள் இயக்குநர் மதன் கேப்ரியலிடம் படித்த மாணவர்கள். இவர்களுடன் சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ் நடிக்கிறார். அவர் பாம்பு விஷம் முறிப்பவராக நடிக்கிறார். மேலும், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், ஆடுகளம் நரேன், எம்.எஸ்.பாஸ்கர், மனோ பாலா மற்றும் லொள்ளு சபா சுவாமிநாதன் ஆகியோரும் நடிக்கின்றனர். மொத்தம் 10 பாடல்கள் இருக்கும் என இயக்குநர் மதன் கேப்ரியல் கூறியுள்ளார்.



மேலும் படிக்க | ஏ.ஆர், முருகதாஸ் தயாரிக்கும் புதிய படம்! ஹீரோ யார் தெரியுமா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR