மலையாளத்தில் கருத்தமுத்து சீரியல் மூலம் பிரபலமான சீரியல் நடிகை பிரியா இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 35 தான். இவர் மருத்துவம் படித்திருந்தாலும் நடிப்பு மீதான ஆர்வத்தால் சீரியல்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து இடம்பெற்று வந்துள்ளார். இந்த சூழலில் இளம் வயதில் இவரது மரணம் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதில் கூடுதல் வேதனை என்னவென்றால் இவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவரது மறைவுச் செய்தியை நடிகர் கிஷோர் சத்யா தனது முகநூலில் உறுதிபடுத்தியுள்ளார். நடிகை பிரியா இறந்ததும் உடனடியாக அவரது வயிற்றில் இருந்த குழந்தை அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்பட்டது. தற்போது அந்த குழந்தைக்கு ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகிறது. பிரியாவுக்கு எந்தவிதமான உடல்நலக்குறைவும் இதுவரை இருந்ததில்லை என்றும் வழக்கமான செக்-அப்பிற்காக அவர் மருத்துவமனைக்கு சென்றபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பிரியாவின் இறப்பை அடுத்து அவரது கணவரும், தாயும் உடைந்து போயுள்ளனர். 


மேலும் படிக்க | சீதா ராமன் அப்டேட்: மகாவை வீட்டை விட்டு வெளியே போக சொல்லும் சீதா, ஷாக்கான ராம்!!


நடிகர் கிஷோர் சத்யா தனது முகநூல் பதிவில்,‘பிரியாவின் அம்மாவும் கணவரும் இந்தத் துயரத்தில் இருந்து எப்படி மீள்வார்கள் என்பது தெரியவில்லை. 35 வயது என்பது மரணத்திற்கான வயதே கிடையாது. விடை தெரியாத பல கேள்விகள் எனக்குள் வந்து கொண்டே இருக்கிறது. அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்’என உருக்கமாகப் பிரியாவின் புகைப்படத்தோடு பதிவிட்டுள்ளார். இந்த பதிவின் கீழ் ரசிகர்கள் தங்கள் இரங்கலை வேதனையுடன் பதிவிட்டு வருகின்றனர்.