உலகநாயகன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 (Bigboss5) நிகழ்ச்சி 68 நாட்களை எட்டியுள்ளது. ஏறத்தாழ இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில், பிரியங்கா, ராஜூ, தாமரை, அக்ஷரா, வருண், சிபி, பாவனி, நிரூப், சஞ்சீவ், அமீர் மற்றும் அபிநய் உள்ளிட்ட போட்டியாளர்கள் இருக்கின்றனர். சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லாமல் சென்றுக்கொண்டிருக்கும் பிக்பாஸின் பிரதான டேக் ’எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்பது தான். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

100 நாள் பிக்பாஸ் (Bigg Boss Tamil) வீட்டில் எல்லா சவால்களையும் சந்தித்து வெற்றிபெறுபவர் யார் என்பது தெரியவில்லை. தற்போது நிகழ்ச்சி 50 நாட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது, மேலும் வாரா வாரம் ஒருவர் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறார்.


Also Read | கொரோனா விதிகளை மீறி பிக்பாஸ் : கமலுக்கு நோட்டீஸ்


இந்த வாரம் யார் வெளியேறுவார் என்று பார்த்தால் குறைவான வாக்குகளுடன் அபிநய் (Abinav) மற்றும் அமீர் உள்ளார்கள். அதன்படி இவர்கள் இருவரில் ஒருவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 


இதற்கிடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாக அமைதியாக இருந்த போட்டியாளர்கள் கூட தற்போது ஆவேசமாக மாறி உள்ளனர். குறிப்பாக எந்நேரமும் புன்னகையுடன் பிக்பாஸ் வீட்டில் வலம் வந்து கொண்டிருந்த அக்சரா நேற்று திடீரென ஆவேசம் ஆனார் என்பதும் ராஜு மற்றும் பிரியங்காவுடன் மோதலில் ஈடுபட்டதை நேற்றைய எபிசோடில் பார்த்தோம். 


 


Also Read | கமல்ஹாசனிடம் விளக்கம் கேட்க மாட்டோம்: தமிழக சுகாதாரத் துறை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR