வெள்ளித்திரையில் "காஸ்டிங் கவுச்" என்ற பெயரில் நடிகைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவது என்பதை நீண்ட காலமாக கேள்விப்பட்டிருப்போம். இதனைப் பற்றி பல நடிகைகள் வெளிப்படையாக பல ஆண்டுகளாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா தன்னுடைய பட பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இதனை வெளிப்படையாக தெரிவித்திருந்தார். தமிழில் தனக்கு ஒரு பெரிய படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும், அப்போது அந்த தயாரிப்பு நிறுவனத்தில் ஒருவர் தன்னிடம் காஸ்டிங் கவுச் கேட்டதால் அதனை நிராகரித்து விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் வாரணம் ஆயிரம் படத்தில் நடித்ததன் மூலமாக பிரபலமான நடிகை சமீரா ரெட்டியும் தனக்கு ஒரு பாலிவுட் நடிகரால் இதுபோன்ற கசப்பான அனுபவம் ஏற்பட்டதாக கூறியிருந்தார். மேலும் இந்த லிஸ்டில் இருக்கும் ராய் லட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்வதி உள்ளிட்ட பலரும் தங்களுக்கு எதிராக வெள்ளி திரையில் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் பற்றி வெளிப்படையாக பேசி இருந்தனர்.


மேலும் படிக்க: உதட்டுல முத்தம் குடுத்தாதான் நடிக்க முடியும்னு சொன்னாங்க -நடிகை வருத்தம்


வெள்ளிப் திரையில் இருக்கும் நடிகைகள் வெளிப்படையாக பேசி வருவதை தொடர்ந்து, சின்னத்திரை நடிகைகளும் தங்களுக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் சின்ன திரையில் இருந்து வெள்ளி திரைக்கு சென்ற நடிகை வாணி போஜன் தனக்கு நேர்ந்த அனுபவம் பற்றி பேசியிருந்தார். அதில் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமாகும் போது சினிமா பிரமுகர் ஒருவர் தனது மேனேஜர் மூலமாக தனக்கு இதுபோன்ற அழைப்பு விடுத்ததாக தெரிவித்து பரபரப்பை கிளப்பினார்.


சமீபத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை தீபிகா தனக்கு ஏற்பட்ட கேஸ்டிங் கவுச் பிரச்சனைகள் பற்றி பேசி இருக்கிறார். அதில் ராகவா லாரன்ஸுக்கு தங்கையாக நடிக்க வேண்டும் என்று ஆடிஷனுக்கு அழைத்ததாகவும். அப்போது அங்கு ஒரு நபர் நீங்கள் நடிக்க இருக்கும் ரோலுக்கு முத்த காட்சிகள் உள்ளதால், அதனை இப்போது நடித்து காட்ட வேண்டும் என்று கூறியதாகவும், அதற்கு தீபிகா நடிக்க மாட்டேன் என்று சொன்னதற்கு இதுவரை 8 பெண்கள் நடித்துக் காட்டி விட்டு சென்றிருக்கிறார்கள், உங்களால் செய்ய முடியாதா என்று கேட்டதாகவும் கூறியுள்ளார். இப்படி வெளிப்படையாக வாய்ப்புக்காக பெண்களுக்கு இவ்வாறெல்லாம் அத்துமீறல்கள் நடப்பதாக தீபிகா கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.


மேலும் படிக்க: அறைக்கு அழைத்த இயக்குநர்: பல ஆண்டுகளுக்குப் பிறகு மாட்டிவிட்ட அஜித் பட நடிகை


இதற்கு முன்னர் செந்தூரப்பூவே என்ற சீரியலில் நடித்த நடிகை ஸ்ரீநிதி  தனக்கு ஒரு பட வாய்ப்பு கிடைத்த போது. சினிமா பிரபலம் ஒருவர் தன்னை அட்ஜஸ்ட் செய்யும்படி கேட்டதாகவும் பின்னர் ஸ்ரீநிதி இல்லை என்றாலும் பரவாயில்லை, அவரது அம்மா அட்ஜஸ்ட் செய்தால் போதும் என்று கூட கூறினாராம். இதனைக் கேட்டு தாய் மகள் இருவருமே பேரதிர்ச்சி குள்ளானதாக சமீபத்தில் கூறியிருந்தார். 


இப்படியாக லேடி சூப்பர் ஸ்டாரோ சீரியல் நடிகையோ பெண்கள் என்றாலே இதுபோன்ற பாலியல் அழைப்புகள் இருக்கத்தான் செய்கிறது. இந்த நிலை மாறினால்  திரைத்துறைக்கு இன்னும் திறமையான நடிகைகள் கிடைப்பார்கள். இந்த நிலை அனைத்து இடங்களிலும் மாற வேண்டும் என்பதே அனைத்து பெண்களின் எதிர்பார்ப்பு.


மேலும் படிக்க: அப்போ அனுஷ்கா.. இப்போ நயன்தாரா..! பாலியல் அழைப்பு குறித்து ஓபனாக பேசிய நயன்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ