சிந்துபாத் ட்ரைலர் வெளியாவதற்கு முன்பே படத்தின் கதையை வெளியிட்ட விஜய் சேதுபதி!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது ‘சிந்துபாத்’ படத்தில் நடித்துள்ளார். பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கி இருக்கும் இப்படம் விஜய் சேதுபதியின் 26-வது படமாகும். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி மகன் சூர்யா நடித்துள்ளார். 


ஆக்ஷன் த்ரில்லர் படமான உருவாகியுள்ளது சிந்துபாத். வரும் 21ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலர் நேற்று அஞ்சலியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது. அதிரடியில் இறங்கியுள்ள விஜய் சேதுபதிக்கு இப்படம் கைகொடுக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்நிலையில், இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது .



இந்நிலையில் சமீபத்தில் நடந்த சிந்துபாத் திரைப்படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது பேசிய விஜய் சேதுபதி, இந்த படம் குறித்த முக்கிய விஷயத்தை வெளிப்படையாக கூறியிருக்கிறார். அதாவது வெளிநாட்டிற்கு கடத்தி செல்லப்படும் தன்னுடைய மனைவியை எவ்வாறு நாயகன் காப்பாற்றுகிறான் என்பது தான் இந்த படத்தின் கதையாம். 


அதோடு மட்டும் இல்லாமல், கேட்க்கும் திறன் குறைபாடுடைய திருடனாக இந்த படத்தில் நடித்துள்ளேன் என்ற கதாநாயகன் பற்றிய ரகசியத்தையும் வெளிப்படையாக  போட்டு உடைத்துள்ளார் விஜய் சேதுபதி. கதையை வெளிப்படையாக செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்த விஜய் சேதுபதியின் இந்த செயலால், என்ன செய்வதென்று அறியாமல் படக்குழுவினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனராம்.