வீர சிவாஜி சினிமாவில் சொப்பன சுந்தரி நான்தானே என்ற பாடலைப் பாடிய வைக்கம் விஜயலட்சுமி 67 பாடல்களை இடைவிடாது இசைத்து உலக சாதனை படைத்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரளாவை சேர்ந்தவர் விஜயலட்சுமி பிறவியிலேயே பார்வையற்றவர். இவர் தமிழ், மலையாளம் சினிமாக்களில் பல பாடல்களை பாடியுள்ளார்.


பார்வை திறனற்ற மாற்று திறனாளியானக இருந்தாலும் இறைவனால் அளிக்கப்பட்ட அதீத திறமையால் பாடகி வைக்கம் விஜயலட்சுமி பல சாதனைகள் படைத்து வருகின்றார்.


இந்த வகையில் நேற்று கொச்சியில் நடந்த இசை நிகழ்ச்சியில், வீணையில் பாடலை இசைத்த வைக்கம் விஜயலட்சுமி, 67 பாடல்களை இடைவிடாது தொடர்ந்து 5 மணி நேரம் இசைத்தார். 


இந்நிலையில் ஒரே அமர்வில் 67 பாடலை வீணையில் இசைத்து சாதனை படைத்துள்ளார் வைக்கம் விஜயலட்சுமி. இவரின் சாதனையை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற பரிந்துரைக்கப்பட்டுள்ளது.