நடிகர் சிவகார்த்திகேயன், தற்போது அயலான் மற்றும் மாவீரன் பட வேலைகளில் படுபிசியாக இருக்கிறார். இதையடுத்து, கமல் தயாரிக்கும் ஒரு படத்திலும் நடிக்கிறார். இந்த நிலையில், இவர் தற்போது புதிய திரையரங்கு ஒன்றை சென்னையில் தொடங்க உள்ளதாக பிரபல தெலுங்கு தொழிலதிபரும் திரையரங்க உரிமையாளருமான சுனில் நரங் கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Anchor To Actor: 


தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பாளராக அறிமுகமாகி, இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக முன்னேறி உள்ளவர், சிவகார்த்திகேயன். இவர் தொகுத்து வழங்கிய பல நிகழ்ச்சிகள் சூப்பர் ஹிட் ஆகின. இதை வைத்தே இளம் ரசிகர் கூட்டத்தை தன்வசப்படுத்திய சிவா, சினிமாவில் தனது கடின உழைப்பால் உயர்ந்தார். மிமிக்கிரி, நகைச்சுவை, நடிப்பு என பல பரிமாணங்களில் பலரை சிரிக்கவும் ரசிக்கவும் வைத்த திறமைசாலி என இவரது ரசிகர்கள் புகழ்வதுண்டு. முன்னணி நடிகர் தனுஷுக்கு நண்பனாக நடித்தவர் இப்போது அவரது படத்திற்கே போட்டி போடும் அளவிற்கு வளர்ந்துவிட்டார். 


மேலும் படிக்க | கொலையா? தற்கொலையா? 3 ஆண்டுகள் கடந்து தீரா மர்மமாக இந்தி நடிகரின் மரணம்!


திரையரங்கு பிசினஸில் சிவா? 


நடிகர் சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம், அடுத்த மாதம் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் மற்றும் படத்தின் ப்ரமோஷன் வேலைகளில் சிவகார்த்திகேயன் படு பிசியாக இருக்கிறார். நேற்று, இப்படத்தில் இடம் பெற்றிருந்த வண்ணாரப்பேட்டையில என்ற பாடல் வெளியானது. இதற்கு ரசிகர்கள் மத்தியிலும் அமோக வரவேற்பு உள்ளது. இந்த நிலையில், அவர் தற்போது திரையரங்கு தொழிலில் இறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


 



தெலுங்கு திரையரங்க உரிமையாளர் சொன்ன தகவல்..


ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏசியன் சினிமாஸ் என்ற பெரிய திரையரங்க கூட்டமைப்பின் தலைவர் சுனில் நரங். இவர் சமீபத்தில் ஒரு பத்திரிகையளார்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது நடிகர் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து, சென்னையில் தியேட்டர் ஒன்றை அமைக்க போவதாக கூறினார். 


சிவகார்த்திகயேன் ஏசியன் சினிமாஸ்..


தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் சினிமாஸ் எவ்வளவு பெரிய திரையரங்கு மற்றும் தயாரிப்பு நிறுவனமோ, அதை விட பெரிய நிறுவனமாக தெலுங்கில் திரையுலகில் திகழ்வதுதான், ஏசியன் சினிமாஸ். இவர்களுடன் பார்ட்னர்ஷிப் வைக்கும் சிவகார்த்திகேயன், சென்னையில் ‘சிவகார்த்திகேயன் ஏசியன் சினிமாஸ்’ என்ற பெயரில் திரையரங்கு தொழிலில் இறங்க உள்ளதாக சுனில் நரங் கூறியுள்ளார். இது குறித்த நேர்காணலில் அவர், இது ப்ளான் செய்து நடக்கப்படவில்லை என கூறியுள்ளார். இவர்களுக்கு ஏற்கனவே பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் சுரேஷ் பாபு மற்றும் நடிகர் சுதர்ஷன் ஆகியோருடன் பார்ட்னர்ஷிப் இருப்பதாக கூறியுள்ளார். 


நயன்தாராவும் அதே கதைதான்..


நடிகர் நயன்தாரா, நடிப்பு மட்டுமல்லாது ஆர்கானிக் முறையில் தயாரிக்கப்படும் அழகு சாதன பிராண்ட் ஒன்றையும் வைத்துள்ளார். இவரது கணவர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து, ரெளடி பிக்சர்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தையும் வைத்துள்ளார். இவர், சென்னையில் உள்ள பழைய திரையரங்கு ஒன்றை விலைக்கு வாங்கி அதை மேம்படுத்தி மல்டி ஃப்லக்ஸ் திரையரங்காக மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளதாக முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன. இப்போது நயன்தாராவை தொடர்ந்து சிவகார்த்திகேயனும் இந்த தொழிலில் குதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | உஷார்! இன்று ஆட்டம் காட்டப் போகும் பைபர்ஜாய் புயல், இந்த இடங்களுக்கு கனமழை எச்சரிக்கை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ