கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 10ஆம் தேதி வெளியான படம், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்:


தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநர்களின் பட்டியில் முக்கிய இடத்தை பிடித்துள்ளவர், கார்த்திக் சுப்புராஜ். வெகு சில படங்களையே இயக்கி இருந்தாலும், தன் படைப்புகளின் மூலம் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் (Jigarthanda DoubleX) படம், ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 2014 ஆம் ஆண்டு பாபி சிம்ஹா மற்றும் சித்தார்த் ஆகியோரின் நடிப்பில் வெளியாகியிருந்த ஜிகர்தண்டா படத்தின் முன்கதையாக இப்படம் உருவாகியிருக்கிறது. 


இப்படத்தின் கதை 1975ஆம் ஆண்டு நடைபெறுவது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகராக வேண்டும் என்று ஆசைப்படும் ஒரு தாதாவையும் அவரை வைத்து படம் இயக்கும் இயக்குநரையும் வைத்து, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. 


முக்கிய கதாப்பாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா…


வாலி படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, இன்று கோலிவுட் திரையுலகின் சிறந்த வில்லன் நடிகர்களுள் ஒருவராக இருப்பவர், எஸ்.ஜே.சூர்யா. 1999ஆம் ஆண்டு வெளியான ‘வாலி’ படம் இவரை இயக்குநராக சினிமாவிற்குள் அறிமுகப்படுத்தியது. அதன் பிறகு விஜய்யை வைத்து இவர் இயக்கிய குஷி படமும் பெரிய ஹிட் அடித்தது. தானே ஹீரோவாக நடித்தும் சில படங்களை இயக்கினார், அவை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. கடந்த சில ஆண்டுகளாக பல முன்னணி தமிழ் ஹீரோக்களின் படங்களில், இவர் வில்லனாகவும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களிலும் நடித்து வருகிறார். 


மேலும் படிக்க | இந்தியாவின் பணக்கார காமெடியன்.. இத்தனை கோடி சொத்துக்களா? அடேங்கப்பா


சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி படத்தில் விஷாலுடன் இணைந்து நடித்திருந்தார். இப்படம் மெகா ஹிட் அடித்து எஸ்.ஜே.சூர்யாவிற்கு நல்ல நடிகர் என்ற பெயரையும் தேடி தந்தது. அதே போல ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் இடம் பெற்றிருந்த இவரது கேரக்டருக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 


எஸ்.ஜே.சூர்யாவின் சம்பளம்..


எஸ்.ஜே.சூர்யா சமீபத்திய நேர்காணல் ஒன்றில், தான் சினிமா இயக்க ஆரம்பித்ததே நடிப்பதற்காகத்தான் என்று கூறியிருக்கிறார். சொன்னது போலவே தொடர்ச்சியாக படங்களிலும் நடித்து வருகிறார். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் (SJ Suryah Salary) படத்தில் நடிப்பதற்காக இவர், 5 காேடி ரூபாய் சம்பளமாக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 


சினிமாவிற்கு வந்த புதிதில் துணை நடிகராக இருந்த எஸ்.ஜே.சூர்யா, சில ஆயிரங்களில் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தார். இயக்குநரான பின்பு லட்சங்களில் ஊதியம் பெற்ற இவர், தற்போது கோடிகளை தொட்டு விட்டார். மார்க் ஆண்டனி படத்திற்காக எஸ்.ஜே.சூர்யா ரூ.3 கோடி சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது. அதையடுத்து நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்காக ரூ.5 கோடியை இவர் பெற்றுள்ளதாக சினிமா வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது கதாப்பாத்திரத்தின் முக்கியத்துவத்திற்கு ஏற்றார் போல, இவர் சம்பளவத்தையும் உயர்த்துவதாக கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்-இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வாங்கிய சம்பளம் எவ்வளவு?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ