தமிழகத்தில் இன்று ஒருநாள் மட்டும் சோலோ திரைப்படம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேளிக்கை வரி ரத்து செய்யக் கோரி நாளை முதல் புதுப்படங்கள் ரிலீஸ் இல்லை என அறிவிக்கப்பட்டது. தயாரிப்பாளர் சங்கத்தின் அறிவிப்பை அடுத்து நாளை தமிழகத்தில் சோலோ வெளியிடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 


துல்கர் சல்மான் மற்றும் நேஹா ஷர்மா நடிப்பில், தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் வெளிவந்துள்ள திரைப்படம் 'சோலோ'.


'சோலோ' ரொமாண்டிக் த்ரில்லர் படமாக உருவாகி உள்ளது. இப்படத்தினை பிஜாய் நம்பியார் இயக்கி உள்ளார். மேலும் கோவிந்த் மேனன் இசையமைத்து உள்ளார். துல்கர் சல்மான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் ஒரே நேரத்தில் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  


இந்நிலையில், இன்று இப்படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியாகி உள்ள நிலையில் கேளிக்கை வரி ரத்து செய்யக் கோரி தயாரிப்பாளர் சங்கத்தின் அறிவிப்பை அடுத்து நாளை தமிழகத்தில் சோலோ வெளியிடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.