சூரரை போற்று, ஜெய் பீம் போன்ற படங்களின் வெற்றியை தொடர்ந்து, வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தமிழில் வெளியாகவுள்ள திரைப்படம் 'வாடிவாசல்'.  இது எஸ்.செல்லப்பா எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம், மேலும் தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | ஜெய்ப்பூரில் மீண்டும் BEAST சூட்டிங்..! விஜய் பங்கேற்பா?


ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை வி கிரியேஷன் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.  இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு 2019ல்- வெளியிடப்பட்டது, கடந்த 2020-ம் ஆண்டு சூர்யாவின் பிறந்தநாளையொட்டி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்தது.  விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 'வாடிவாசல்' படத்தின் படப்பிடிப்பு கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட நிலையில், மீண்டும் அரசு விதித்த தளர்வுகளின் அடிப்படையில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு இருக்கிறது.



ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் முடிந்து இந்த ஆண்டு ரிலீசாக உள்ளது.  இந்நிலையில் இப்படத்தின் OTT உரிமையை பிரபல நிறுவனம் வாங்கப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.  அதாவது பிரபல OTT இயங்குதளமான சோனிலிவ் 'வாடிவாசல்' படத்தின் வெளியீட்டு உரிமையை ரூ.50 கோடிக்கு வாங்கப்போவதாகவும், இதுதொடர்பாக இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.தாணுவிடம் அந்நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.  தற்போது சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படம் அடுத்த மாதம் திரையரங்கில் வெளிவர உள்ளது.


ALSO READ | திரையரங்குகளில் வெற்றிகரமான 50வது நாளில் 'மாநாடு'!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR