ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் சிம்பு 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்'  திரைப்படத்தில் நடித்தார். இப்படத்திற்கு பிறகு தற்போது  நடிகர் சிம்பு யார் இயக்கத்தில், எந்த மாதிரியான கதைக்களத்தில் நடிக்கப்போகிறார் என்று பல தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குறிப்பாக அஜித் நடிப்பில் வெளியான பில்லா படத்தின் 3 ஆம் பாகத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியானது.


இதையடுத்து நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில், அடுத்த படம் குறித்து டிவித் பதிவு செய்துள்ளார். அதில்,


 



 


அடுத்த படம் குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவதை நிறுத்துங்கள். படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் வரையில் தயவு செய்து பொறுமை கொள்ளுங்கள். உங்கள் ஆதரவுக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.