சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடைசியாக நடித்த படம் 'அண்ணாத்த'. அண்ணன் - தங்கை பாசத்தை மையமாக கொண்டு வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதேபோல் தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் கடைசியாக இயக்கிய படம் 'பீஸ்ட்'. இந்த படம் வெளியாவதற்கு முன்பே ரஜினியின் அடுத்த படத்தை நெல்சன் இயக்க உள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏற்கெனவே சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கிய 'டாக்டர்' படம் ஹிட் அடித்ததால் 'பீஸ்ட்' படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் இந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யாததால் எதிர்மறை விமர்சனங்களால் சமூக வலைதளங்கள் நிரம்பி வழிந்தன. இதனால் ரஜினி படத்தில் இருந்து நெல்சன் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக வதந்திகள் பரவின. இருப்பினும் ரஜினி மற்றும் தயாரிப்பு நிறுவனம் வைத்திருந்த நம்பிக்கையால் தலைவர் 169 படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குவது மீண்டும் ஒருமுறை உறுதிசெய்யப்பட்டது. 


ஆனால், இந்த படத்தின் திரைக்கதையை ரஜினியின் ஆஸ்தான இயக்குநரான கே.எஸ்.ரவிக்குமார் எழுதுவதாக தகவல்கள் வெளியாகின. இதனை மறுத்த நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி, இயக்குனர் நெல்சன் இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை செதுக்கி வருகின்றார் எனவும், வெற்றிபெற வேண்டும் என்ற வெறியுடன் நெல்சன் வேலை செய்து வருவதாகவும் கூறினார். இதனால் தலைவர் 169 படத்தில் கே.எஸ்.ரவிக்குமார் பணியாற்றவில்லை என்பது உறுதியானது. 


மேலும் படிக்க | மீண்டும் மாஸ்க் : கல்வி நிறுவனங்களுக்கு கடிதம் எழுதி வலியுறுத்திய மாநகராட்சி


இந்த நிலையில் படத்தின் டைட்டிலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரத்தக் கறையுடன் கூடிய கத்தி தொங்குவது போல் இடம்பெற்றுள்ள போஸ்டருடன் ஜெயிலர் எனும் தலைப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த போஸ்டரை சமூக வலைத்தளங்களில் ரஜினி ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். படத்தின் ஆரம்பகட்ட வேலைகள் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. 


 



 


இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ரஜினியுடன் கன்னட நடிகர் சிவராஜ்குமார், ஐஸ்வர்யா ராய், ரம்யாகிருஷ்ணன், பிரியங்கா மோகன் ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை பான் இந்தியா படமாக வெளியிட இயக்குநர் நெல்சன் திட்டமிட்டுள்ளார். சிறை மற்றும் சிறைக்கைதிகள் தொடர்புடைய கதையை மையாக வைத்து இந்த படம் உருவாக உள்ளது. எனவே அனைத்து மொழி ரசிகர்களுக்கும் புரியும் வகையில் ஜெயிலர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 


இந்த படத்தில் சிறுவயது ரஜினியாக சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாகவும், பிளாஸ் பேக் காட்சிகளில் அவர் ரஜினியாக நடிக்க உள்ளதாகவும் மற்றொரு தகவல் சமூக வலைதளங்களில் உலா வருகிறது. 


மேலும் படிக்க | Agneepath Scheme Protest: அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக 3வது நாளாக போராட்டம் - ரயில்களுக்கு தீ வைப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYe