சூர்யா திரையுலகில் நுழைந்து 20 ஆண்டுகள் ஆனதை அவரது ரசிகர்கள் கொண்டாடினர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் சூர்யா திரையுலகில் நுழைந்து நேற்றுடன் 20 வருடங்கள் ஆகிவிட்டது. அவரின் முதல் படமான நேருக்கு நேர் 1997-ம் ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி வெளியானது. இதனை சூர்யா ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடினர்.


நந்தா, பிதாமகன், பேரழகன், கஜினி, 24 உள்ளிட்ட திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வெர்சட்டைல் நடிகர் என நிரூபித்திருக்கிறார் சூர்யா.


இவர் நடிகை ஜோதிகாவைக் காதலித்துப் பெற்றோர் அனுமதியுடன் 2006-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். வெற்றிகரமான இந்த தம்பதிக்கு தேவ், தியா என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.


சூர்யா தொடங்கிய '2D Entertainment' தயாரிப்பு நிறுவனம் 36 வயதினிலே, பசங்க 2, உள்ளிட்ட படங்களைத் தயாரித்திருக்கிறது. அடுத்து ஜோதிகா நடிக்கும் 'மகளிர் மட்டும்' படத்தைத் தயாரித்து வருகிறது.


நடிகர் சூர்யா திரையுலகில் நுழைந்து 20 ஆண்டுகள் ஆன நிலையில் அவர் தன்னுடைய ரசிகர்களுக்கு நன்றி தெர்வித்து டிவிட் செய்துள்ளார்.


 



 


இவர் தற்போது தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தில் நடித்து உள்ளார். படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது, அது முடிந்தவுடன் டீசர், டிரைலர் தேதிகள் பற்றி அறிவிக்கப்படும் என இயக்குனர் விக்னேஷ் சிவன் ஏற்கனவே அறிவித்தது உள்ளார்.