Cooku With Comali 5 : கடந்த சில ஆண்டுகளாக ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், ஓராயிரம் தொலைக்காட்சிகள் வந்து விட்டாலும், அதில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மட்டுமே ஹிட் அடிக்கின்றன. அவை மட்டுமே உண்மையாக ரசிகர்களை மகிழ்விக்கிறது. அப்படி, கடந்த 4 சீசன்களாக ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த நிகழ்ச்சி, குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி, தளபதி நடிகரின் பெயர் கொண்ட சேனலில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குக் வித் கோமாளி 5:


சமையல் தெரிந்த ஒரு பிரபலம்-சமையல் என்றால் என்னவென்றே தெரியாத ஒரு பிரபலம், இவர்கள் இணைந்து சமைப்பதுதான் குக் வித் கோமாளி. இதில் சமைப்பதற்காக வரும் பிரபலங்கள், மக்களிடையே சிறிது அறியப்பட்ட பிரபலங்களாக இருப்பார்கள். இவர்கள்தான் குக், இவர்களுடன் இணைந்து சமைக்கும் இன்னொரு பிரபலம், கோமாளி. ஒருவர் சீரியஸாக சமையல் செய்ய, இன்னொருவர் காமெடியாக கண்டென்ட் கொடுத்துக்கொண்டே சமையலை சொதப்ப வேண்டும். கேட்பதற்கு மட்டுமல்ல, பார்ப்பதற்கும் வேடிக்கையாக இருக்கும் இந்த நிகழ்ச்சி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரை கவர்ந்திருக்கிறது. 


தற்போது, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசன் தொடங்கியிருக்கிறது. முன்பிருந்த சீசன் போல அல்லாமல், தற்போது இதில் எக்கச்சக்க மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இதுவரை செஃப் வெங்கடேஷ் பட்-செஃப் தாமு ஆகியோர் நடுவராக இருந்து வந்த நிலையில், முதலாமவர் நிகழ்ச்சியை விட்டு விலகினார். இதையடுத்து, நடிகரும் சமையல் கலை நிபுணருமான புதிதாக மாதம்பட்டி ரங்கராஜ் புதிய நடுவராக நியமிக்கப்பட்டார். புதிய கோமாளிகள், புதிய குக்குகள், பிரம்மாண்டமான செட் என குக் வித் கோமாளி நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியது. இந்த நிலையில்தான், முதல் இரண்டு எபிசோடுகளில் கோமாளியாக வந்த ஒரு பிரபலம் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாக அறிவித்திருக்கிறார்.


மேலும் படிக்க | குக் வித் கோமாளி 5வது சீசன் ப்ரோமோ: இவர்கள் தான் இந்த சீசனின் கோமாளிகள்


நாஞ்சில் விஜயன்:


சின்னத்திரை நகைச்சுவை பிரபலமாக இருப்பவர், நாஞ்சில் விஜயன். இதற்கு முன்னர் எத்தனையோ காமெடி கலாட்டா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மக்களை சிரிக்க வைத்த அவர், குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியிலும் முக்கிய போட்டியாளராக களமிறங்கினார். இவரை, நேற்றைய எபிசோடில் காணவில்லை. இது குறித்து ரசிகர்கள் ஆராய்ந்த போதுதான், அவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய விவரம் தெரிய வந்திருக்கிறது. 



இது குறித்து அவர் வெளியிட்டிருந்த பதிவில், தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாகவும், தனக்கும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் சேனலுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை எனவும் தெரிவித்திருக்கிறார். பாக்ஸ் ஆபிஸ் நிறுவனம் தயாரிக்கும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் தான் கலந்து கொள்ளப்போவதில்லை என்றும் நாஞ்சில் விஜயன் தெரிவித்திருக்கிறார். தனக்கு ஆதரவு அளித்த மக்களுக்கும் அவர் நன்றி கூறியிருக்கிறார். 


என்ன பிரச்சனை?


குக் வித் கோமாளி நிகழ்ச்சியை கடந்த 4 சீசன்களாக மீடியா மேசன்ஸ் நிறுவனம் தொகுத்து வழங்கி வந்தது. இந்த நிறுவனம், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இந்த சீசனில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தது. இப்போது அந்த நிறுவனம், அப்படியே சூரியனின் ஆங்கில பெயர் கொண்ட தமிழ் தொலைக்காட்சிக்கு மாறிவிட்டது. இவர்களின் தயாரிப்பில் ‘டாப் குக் டூப் குக்’ என்ற நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. இதில், வெங்கடேஷ் பட் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சி மீது எதிர்பார்ப்பு எகிறியிருக்கும் நிலையில், இது குறித்த ப்ரமாே வீடியோக்களும் சமீபத்தில் வெளியாகியிருந்தது. இந்த நிறுவனம், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலக என்ன காரணம் என்பது குறித்து இன்னும் வெளிப்படையாக தெரியவில்லை. 


மேலும் படிக்க | வெங்கடேஷ் பட் இல்லாமல் குக் வித் கோமாளி 5 எப்படியிருக்கு? ரசிகர்கள் விமர்சனம்..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ