“எனக்கு மாப்ள பாத்தா அரவிந்த் சாமி மாதிரி ஒருத்தன பாருங்க..” என 2000களில் கூறிய இளம் பெண்கள் பலர் உண்டு. அந்த காலத்திலேயே சாக்லேட் பாய் என்று பெயர் எடுத்தவர் இவர். அமுல் பேபி போல இருக்கும் இவரது தேகமும், இவரது தமிழ் உச்சரிப்பும் அன்றைய இளம் பெண்களை என்னவோ செய்தது. மணிரத்னமின் பல படங்களில் நடித்தனாலோ என்னவோ இவரை பல மங்கையருக்கு பிடித்து போனது. இப்படி திரைவாழ்வின் உச்சத்தில் இருந்த அரவிந்த் சாமி தன் வாழ்விலும் பல்வேறு இன்னால்களை சந்தித்து பின் ஃபீனிக்ஸ் பறவை போல மீண்டும் எழுந்து வந்தார். இன்று அவருக்கு பிறந்தநாள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகரில் இருந்து தொழிலதிபர்..


அரவிந்த் சாமி, ரஜினி நடித்திருந்த ‘தளபதி’ படத்தில் அவருக்கு தம்பியாக நடித்து அறிமுகமானார். அடுத்து, இயக்குநர் மணிரத்னமுடன் தாெடர்ந்து கைக்கோர்த்து ரோஜா,  பாம்பே போன்ற படங்களில் நடித்திருந்தார். தனது தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக அரவிந்த் சாமி, 2000ம் ஆண்டிற்கு பிறகு திரையுலகை விட்டு வெளியேறினார். சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் தொழிலதிபராக வேண்டும் என்று ஆசை கொண்டிருந்த அரவிந்த் சாமி, அதை நோக்கி பயணம் செய்ய ஆரம்பித்தார். பின்பு 2013ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய கடல் படம் மூலம் மீண்டும் திரையுலகிற்குள் ரீ-எண்ட்ரி கொடுத்தார். இப்போது பெரிய ஹீரோக்களுக்கு வில்லனாகவும் அல்லது குணச்சித்திர நடிகராகவும் நடித்து மக்களின் மனங்களில் புதிய இடத்தை பெற்றிருக்கிறார். 


மேலும் படிக்க | OTTல் வெளியாகியுள்ள புதிய திரைப்படங்கள்; Netflix, Amazon, Hotstar, ZEE5ல் பாருங்கள்!


பயங்கர விபத்து..


சாமான்யனின் வாழ்வை போலவே சினிமாவில் சாதிக்கும் கலைஞர்கள் பலரது வாழ்விலும் இன்னல்களும் துயரங்களும் துன்பங்களும் துரத்திக்கொண்டே இருக்கும். அப்படித்தான் சில விஷயங்கள் அரவிந்த் சாமியின் வாழ்வினை ஆட்டிப்படைத்தது. 90களில் பல வெற்றிப் படங்களை கொடுத்த அரவிந்த் சாமிக்கு சில படங்கள் தோல்வியாகவும் அமைந்தன. இவர் நடித்துக்கொடுத்த சில படங்கள், பணபிரச்சனை காரணமாக ரிலீஸ் ஆக முடியாமல் முடகத்தில் இருந்தது. இதையடுத்து விரக்தியின் உச்சத்தை எட்டிய அவர், சினிமாவை விட்டு விலகி தனது கணவான சொந்த தொழிலை நாேக்கி ஓடினார். ஒரு பிரபல நிறுவனத்திற்கு அதிபதியாகி தனது கனவை நனவாகவும் மாற்றினார். ஆனால் இங்கேதான் விதியின் சதி விளையாடியது. 2005 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஒரு விபத்தில் அரவிந்த் சாமியின் முதுகுத்தண்டில் பலத்த அடி ஏற்பட்டது. இதனால், அவரது கால்கள் செயலிழந்து நடக்க முடியாத நிலைக்கு சென்றுவிட்டார். 


விவாகரத்து..


வாழ்வின் மிகவும் கடினமான தருணத்தில் இருந்த அரவிந்த் சாமி, தனது உடல்நிலையை சரிசெய்ய பல்வேறு முயற்சிகளையும் அதற்கான சிகிச்சைகளையும் மேற்கொண்டார். அவரது கால்கள் சரியாக 4-5 வருடம் எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இவரது மனைவியும் இவரும் 7 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் 2010 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று கொண்டதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு ஆதிரா என்ற மகளும் ருத்ரா என்ற மகனும் உள்ளனர். அதன் பிறகு 2012ஆம் ஆண்டில் அபர்ணா முகர்ஜி என்பவரை மணம் முடித்தார். 


மாஸ் கம்-பேக்:


விபத்து..விவாகரத்து என தனது வாழ்வில் சில கடினமான கட்டங்களை சந்தித்த அரவிந்த் சாமி “பொருத்தது போதும் பொங்கி எழ வேண்டும்” என்பது போல மீண்டும் சினிமாவிற்குள் வந்தார். கடல் படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தார். இவர் மீண்டும் திரையுலகிற்கு வந்ததை பார்த்து ரசிகர்கள் மகிழ்ந்தாலும் இந்த படம் ஏனோ தோல்வியை தழுவியது. பின்னர், 2015ஆம் ஆண்டு வெளியான ‘தனிஒருவன்’ படத்தில் ‘சித்தார்த் அபிமன்யூ’ என்ற தந்திர வில்லனாக நடித்திருந்தார். இவரை இப்படியொரு பரிமானத்தில் பார்த்திராத சினிமா ரசிகர்கள் சிலிர்த்து போய் சில்லரையை சிதற விட்டனர். அடுத்து ‘போகன்’ படத்தில் கூடுவிட்டு கூடு பாயும் வில்லனாக நடித்தார். நெடு நாட்களுக்கு பின்னர் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தில் ஹீரோவாக நடித்தார். சமீபத்தில் வெளியான ‘கஸ்டடி’ படத்தில் மீண்டும் வில்லனாக வந்து மிரட்டினார். 


பிறந்தநாள்:


சினிமாவின் டாப் ஹீரோக்கள் முதல் ஃப்ளாப் ஹீரோக்கள் வரை அனைருடனும் நடித்து முத்திரை பதித்த அரவிந்த் சாமிக்கு இன்று 53ஆவது பிறந்தநாள். இந்த நாளில் இவருக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். மேலும், இன்னல்களை கடந்து வாழ்வில் சாதிக்க வேண்டும் என விரும்புவோருக்கு அரவிந்த் சாமியின் வாழ்க்கை சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவதாகவும் சில ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். 


மேலும் படிக்க | தமிழ் சினிமாவில் இத்தனை ‘வாரிசு’ நடிகர்களா..! முடிவே இல்லாமல் நீளும் லிஸ்ட்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ