பாகுபலியை மிஞ்சும் அளவிற்கு தற்போது மகாபாரதம் அதிக செலவில் உருவாகவுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய இதிகாசங்களில் முதன்மையானதாகக் மகாபாரதத்தை ரூ.1,000 கோடி செலவில் பிரம்மாண்டத் திரைப்படமாக எடுக்க பிரபல தொழிலதிபர் பிஆர் ஷெட்டி திட்டமிட்டுள்ளார். 


தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் தயாரிக்கப்படவுள்ள இந்தப் படத்தை பிரபல விளம்பரப் பட இயக்குநர் விஏ ஸ்ரீகுமார் மேனன் இயக்குகிறார்.


இப்படத்திற்காக ரூ.1000 கோடி பட்ஜெட் போடப்பட்டுள்ளது. வரும் 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படயிருக்கிறது. அடுத்த ஆண்டு தொடங்கப்படும் இப்படம் வரும் 2020-ம் ஆண்டு திரைக்கு வரும்.