கெளதம் வாசுதேவன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் மேகா ஆகாஷ் நடித்துள்ள படம் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’. இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை இயக்குனர் கெளதம் மேனன் எப்பொழுது தெரிவிப்பார் என்ற கேள்வி எழுந்து இருந்தது. அத்துடன் அந்த படத்தின் இசையமைப்பாளர் பெயரை "MR.X" என்று வைத்து மக்கள் இடையில் சுஸ்பென்ஸ்ஐ இன்னும் அதிகரிக்க வைத்துள்ளார் இயக்குனர் கெளதம் வாசுதேவன்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'எனை நோக்கி பாயும் தோட்டா’ போஸ்டர்கள், டீசர் வெளியான போதிலும், இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது குறித்து படக்குழுவினர் எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை. 


படத்தில் வரும் மறு வார்த்தை பேசாதே பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்ப்பு பெற்றதை அடுத்து அப்படத்தின் இசையமைப்பாளர் யாராக இருக்கும் என்று ஆவல் இன்னுமும் அதிகரித்தது. தற்போது வரை  இசையமைப்பாளர் யார் என்பது அறியாமல் ரசிகர்கள் மிகவும் குழப்பமடைந்து வருகிறனர்.


இந்நிலையில் தற்போது இந்த சுஸ்பென்ஸ் வெளியிட படத்தின் இயக்குனர் கெளதம் வாசுதேவன் முதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் டிவிட் பதிவிட்டு உள்ளார், அதில் படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை குறித்து நாளை வெளியிடப்போவதாக தெரிவித்து உள்ளார்.