தமிழ் சினிமாவின் இளம் இயக்குனர் கண்ணன் ரங்கசாமி இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார். தாயம் என்ற படத்தின் இயக்குனர் கண்ணன் ரங்கசாமி. அவருக்கு வயது 29.


கடந்த மாதம் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 15 நாட்கள் கோமாவில் இருந்து, 40 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார். இந்நிலையில் இன்று காலை அவரது வீட்டில் திடீரென்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். மிகவும் இளம் வயதில் இவர் இறந்தது திரையுலகத்தினர் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.