இன்று முதல் தியேட்டர்கள் வழக்கம்போல் செயல்படும் என திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தியேட்டர்களுக்கு விதிக்கப்படும் கேளிக்கை வரி குறித்து, திரையரங்கு உரிமையாளர்கள் தமிழக அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் அரசின் முடிவை ஏற்றுக் கொண்டனர் திரையரங்கு உரிமையாளர்கள். இதனையடுத்து, இன்று காலை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக அரசு விதித்துள்ள 30 சதவீத கேளிக்கை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி, திரையரங்கு உரிமையாளர்கள் கடந்த 3-ம் தேதி முதல் திரையங்குகளை மூடி போராட்டம் நடத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.