கோலிவுட் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்தவர் போண்டா மணி. இவர், கடந்த சில வருடங்களாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் இவர் இயற்கை எய்தினார். இந்த நிலையில் இவரது குடும்பம் குறித்த சோகமான தகவல்கள் சில வெளியாகியுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

போண்டா மணி:


நடிகர் போண்டா மணியை அனைவருக்கும் வடிவேலுவுடன் நடித்தவர் என்றுதான் தெரியும். குறிப்பாக இவர் பாம்புடன் சேர்ந்து செய்யும் காமெடி இன்றளவும் மீம் டெம்ப்ளேட்டாக இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. உண்மையில், போண்டா மணி ஈழத்தை பூர்விகமாக கொண்டவர். இவரது உண்மையான பெயர் கேதீஸ்வரன். இவர், தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை கலைஞராக இருந்த போது வடிவேலு, விவேக், முரளி உள்ளிட்ட பல நடிகர்களுடன் சேர்ந்து படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக சுந்தரா டிராவல்ஸ், அன்பு, திருமலை, ஐயா, வின்னர், வேலாயுதம் உள்ளிட்ட படங்களில் இவரது காமெடி பலரை ரசிக்க வைத்திருந்தது.


போண்டா மணி இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராக வந்துள்ளார். இந்த நிலையில், சில வருடங்களுக்கு முன்பிருந்து இவரது உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 


உடல் நிலை பாதிப்பு:


போண்டா மணி ஒருநாள் படப்பிடிப்பின் போது சாக்கடைக்குள் தவறி விழுந்துள்ளார். இதனால் இவர் அந்த கழிவு நீரை பருகும் சூழல் உருவாகிவிட்டது. இதிலிருந்து, இவரது இரு சிறுநீரகங்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதையடுத்து, சில மாதங்களுக்கு முன்பிருந்து அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பல முறை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து இவருக்கு சில சினிமா நட்சத்திரங்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளனர். இதையடுத்து போண்டா மணி சற்று உடல் நலன் தேறி வந்துள்ளார். இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்ததை தொடர்ந்து, இவரது குடும்பம் மருத்துவ செலவுகளை சமாளிக்க முடியாமல் இருந்துள்ளனர். 


மேலும் படிக்க | சலார் படத்தின் பட்ஜெட் 400 கோடி-அதில் இயக்குநருக்கு மட்டும் ‘இத்தனை’ கோடி சம்பளம்!


உயிரிழப்பு:


நடிகர் போண்டா மணி, நேற்று (டிசம்பர் 23) இரவு 11 மணியளவில் பல்லாவரத்தில் உள்ள வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து பதறிய அவரது குடும்பத்தினர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இவரது இரு சிறுநீரகங்களும் செயலிழந்தததால் இந்த மரணம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திரையுலகமே சோகத்தில் வாடியது. 


இப்படியொரு சோகமா..? 


நடிகர் போண்டா மணி, ஈழத்தில் பிறந்தவர். இவருடன் 16 பேர் பிறந்துள்ளனர். அதில் 8 பேர் இலங்கை இனக்கலவரத்தில் இறந்து போயுள்ளனர். அது மட்டுமன்றி அவரது தாய்-தந்தையர் கூட இலங்கை போரில் உயிரிழந்துள்ளனர். இந்த கலவரத்தில் போண்டா மணியின் இரண்டு கால்களிலும் குண்டடி பட்டுள்ளது. அதில் ஒரு காலில் இருந்த குண்டினை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர். இன்னொரு காலில் இருந்து குண்டை அகற்ற முடியாததால் நடக்க முடியாத நிலைக்கு சென்றுள்ளார். இருப்பினும், அதே காலுடன் ஊர் ஊராக சென்று கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது குடும்பத்தினரை காப்பாற்றியுள்ளார். 


அது மட்டுமன்றி போண்டா மணிக்கு இதுவரை எந்த கெட்டப்பழக்கமும் இல்லை என்றும் கூறப்படுகிறது. பாேண்டா மணியின் உயிரிழப்பு திரையுலகினரையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 


மேலும் படிக்க | நகைச்சுவை நடிகர் போண்டா காலமானார்... அதிர்ச்சியில் திரையுலகினர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ