பொல்லாதவன், அசுரன், வடசென்னை, விசாரணை என தமிழ்சினிமாவிற்கே அடையாளம் தரும் வகையில் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் வெற்றி மாறன். இவர், நேற்று ஒரு சினிமா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அப்போது அவர் விஜய்யை வைத்து ஒரு படம் இயக்கு உள்ளதாக கூறிய செய்து பலரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

படங்களின் அப்டேட்டுகளை அள்ளிக்கொடுத்த வெற்றிமாற


2007ஆம் ஆண்டு வெளிவந்த ‘பொல்லாதவன்’ படம் மூலம் கோலிவுட் உலகில் தனி அரியனை போட்டு அமர்ந்தவர் வெற்றிமாறன். ஜனரஞ்சகமான கதை, கத்திய-ரத்தம் நிரம்பிய சண்டை காட்சிகள், பீப் போட்ட வசனங்கள் என இவர் படத்தில் ரசிப்பதற்கான அம்சங்கள் எக்கச்சக்கமாக இருக்கும். கடைசியாக இவர் இயக்கிய வடசென்னை, படத்தின் இரண்டாம் பாகம் குறித்து தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் உள்ளன. நேற்று, வெற்றி மாறன் ஒரு படவிழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவையடுத்து பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது இவர் நிறைய அப்டேட்டுகளை ரசிகர்களுக்கென வாரி வழங்கினார். 


மேலும் படிக்க | லியோ படத்திற்கு சிக்கல்.? போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்


விஜய் குறித்து வெற்றிமாறன்..


நடிகர் விஜய், சமீபத்தில் 10,12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தாெகை மற்றும் சான்றிதழ் வழங்கும் விழாவினை நடத்தினார். அந்த விழாவின் போது வெற்றி மாறனின் அசுரன் படத்திலுருந்து “காசு இருந்தா புடிங்கிக்கிவானுவ..படிப்ப மட்டும் திருட முடியாது..” என்ற டைலாக்கை மாணவர்களிடம் பேசி காண்பித்தார். இது குறித்து நேற்றைய விழாவில் வெற்றிமாறனிம் பேசப்பட்டது. இதற்கு வெற்றிமாறன், விஜய்யின் பேச்சை தான் வரவேற்பதாகவும் அவர் பெரியார், அண்ணா போன்ற தலைவர்களை பற்றி மாணவர்களிடம் பேச சொன்னது நல்ல விஷயம் என்றும் கூறினார். மேலும், விஜய்யை வைத்து தான் ஒரு படம் இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்து விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருவதாகவும் குறிப்பிட்டார். தற்போது விடுதலை 2 மற்றும் வாடிவாசவ் ஆகிய இரண்டு படங்களிலும் தான் பிசியாக உள்ளதாலும், விஜய்யும் அவரது ஷூட்டிங்கிள் பிசியாக உள்ளதாலும் இதுபற்றி முடிவெடுக்க நேரம் அமையவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இவர் கொடுத்த இந்த அப்டேட், ரசிகர்களின் மனதில் தேனை பாய்த்தது போல இனிப்பான செய்தியாக அமைந்துள்ளது. 


வாடிவாசல் படத்தில் ரோபோ காளை..


தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இருக்கும் படம் வாடிவாசல். சிறுத்தை சிவாவுடன் கங்குவா படத்தில் கூட்டணி வைத்துள்ள சூர்யா, வாடிவாசல் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படம் குறித்த அப்டேட் பல ஆண்டுகளுக்கு முன்னரே வெளியான நிலையில் இன்னும் பட வேலைகள் பெரிதாக தாெடங்கப்படாமல் இருக்கின்றன. இதுகுறித்தும் நேற்றைய விழாவில் வெற்றி மாறன் பேசினார். அப்போது, விடுதலை 2 பட வேலைகள் முடிந்தவுடன் வாடிவாசல் பட வேலைகள் முழு வீச்சில் தொடங்கும் என தெரிவித்தார். மேலும், இந்த படத்தில் ரோபோ காளை இடம் பெற உள்ளதாகவும் அதற்கான பணிகள் லண்டனில் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 


வடசென்னை 2:


தனுஷ், ஆண்ட்ரியா, அமீர், டானியல் பாலாஜி, சமுத்திரகனி உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியாகி எக்கச்சக்க ரசிகர்களின் ஆதரவை பெற்ற படம் வடசென்னை 2. இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அறிவிப்பிற்காகவும் ரசிகர்கள் நெடுநாட்களாக தவம் கிடக்கின்றனர். இந்த படம் குறித்து நேற்றைய விழாவில் பேசிய வெற்றிமாறன், வடசென்னை இரண்டாம் பாகம் கண்டிப்பாக தயாராகும் என்றும் இதுகுறித்த அப்டேட் விரைவில் வெளிவரும் என்றும் தெரிவித்தார். ஒட்டுமொத்தமாக ஒரே நாளில் இத்தனை அப்டேட்டுகளை வெற்றிமாறன் கொடுத்துவிட்டதால் ரசிகர்கள் திக்குமுக்காடி போயுள்ளனர். 


மேலும் படிக்க | இந்திய கிரிக்கெட் வீரர் மீது பிரபல நடிகை பாலியல் புகார்..! அதிரவைத்த திடுக்கிடும் உண்மைகள்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ