நடிகை வரலட்சுமி தற்போது பெண்களின் பாதுகாப்புக்காக ‘சேவ் சக்தி’ என்ற பெயரில் புதிய அமைப்பு ஒன்றையும் தொடங்கியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், வரலட்சுமி கடத்தப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் இன்று ஒரு புகைப்படம் வைரலாக பரவத் தொடங்கியது. மேலும் #VaralaxmiGotKidnapped என்ற டேக்கும் சமூக வலைத்தளங்களில் பரவத் தொடங்கியது. இதனால் சினிமா உலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


எனவே, இதுகுறித்து வரலட்சுமி தரப்பில் விசாரிக்கும்போது, இது வரலட்சுமி நடிக்கும் புதிய படத்திற்கான புரோமோஷன் என்று கூறப்பட்டுள்ளது. அந்த படம் குறித்த அறிவிப்பை இன்று மாலை அறிவிக்கப்போகிறார்களாம். அதற்கு முன்னதாக பரபரப்பை ஏற்படுத்துவதற்காகவே இதுபோன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.