இந்தி நடிகர் ஓம்புரி(வயது66) மாரடைப்பால் இன்று மும்பையில் காலாமானார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹரியானா மாநிலம் 1950-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி ஓம் புரி பிறந்தார். 1976-ம் ஆண்டு ‛காசிராம் கொட்வால்' என்ற மராத்தி படத்தின் மூலம் சினிமாவில் 


அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார். ஹிந்தி தவிர்த்து பிற மொழிகளிலும் நடித்திருக்கிறார், சினிமா மட்டுமல்லாது டிவி சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.


இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார். இரண்டு முறை தேசிய விருது, பிலிம்பேர் விருது, சர்வதேச விருது என பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். இவருக்கு இஷான் என்ற ஒரு மகன் இருக்கிறார்


மறைந்த நடிகர் ஓம் புரிக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கலை தெரிவித்திருக்கிறார். ஏராளமான திரை பிரபலங்களும் சமுக வலைதளங்களில் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.