ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆக இருந்து கதாநாயகன், வில்லன் என பன்முக நடிகராக உயர்ந்தவர் நடிகர் விஜய் சேதுபதி. தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் உள்ள பிஸியான நடிகர்களில் இவரும் ஒருவர். விஜய் சேதுபதி ஹிந்தியில் உருவான பார்சி என்ற வெப் தொடரிலும் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான மகாராஜா படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இது இவரது 50வது படம் ஆகும். இதனைத் தொடர்ந்து தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பிக்பாஸ் 8-ல் சர்ச்சை ஜோடி அர்ணவ்-அன்ஷிதா! Ex மனைவி போட்ட மாஸ் பதிவு..


சினிமாவை தாண்டி தற்போது ரியாலிட்டி ஷோவிலும் மீண்டும் நுழைந்துள்ளார் விஜய் சேதுபதி. இவர் ஏற்கனவே சன் தொலைக்காட்சியில் வெளியான ஒரு குக்கிங் ஷோவில் தொகுப்பாளராக இருந்துள்ளார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த ஏழு சீசன்களாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், இந்த ஆண்டு அவர் விலகியதால் விஜய் சேதுபதி தொகுப்பாளராக பொறுப்பேற்றுள்ளார். பிக் பாஸ் சீசன் 8 தொடங்கிய இரண்டு வாரங்களிலேயே தனது வித்தியாசமான பேச்சின் மூலம் அனைவரையும் கவர்ந்துள்ளார்.  



விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி பீனிக்ஸ் என்ற படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். இதற்கு முன்பு விஜய் சேதுபதியுடன் இணைந்து சிந்துபாத் என்ற படத்தில் நடித்திருந்தார். பீனிக்ஸ் படத்தை பிரபல ஸ்டன்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கியுள்ளார். பிரேவ் மேன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இந்த படத்தில் சூர்யா விஜய் சேதுபதியுடன் இணைந்து வரலட்சுமி சரத்குமார், நடிகர் சம்பத், நடிகை தேவதர்ஷினி ஆகியோரும் நடித்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் இந்த படத்தின் டீசர் வெளியான நிலையில் நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாக உள்ளது. 


பீனிக்ஸ் படத்தின் அறிமுக விழாவில் சூர்யா விஜய் சேதுபதி பேசியிருந்தது விமர்சனத்திற்கு உள்ளானது. தந்தையின் செல்வாக்கால் தான் உங்களுக்கு பட வாய்ப்பு கிடைத்ததா என்ற கேள்விக்கு, 'அப்பா வேற நான் வேற, போஸ்டரில் கூட சூர்யா என்றுதான் போட்டு இருக்கிறோம், சூர்யா விஜய் சேதுபதி என்று போடவில்லை' என்று தெரிவித்திருந்தார்.  இதற்கு நெட்டிசன்கள் பலர் தந்தை பிரபலமாக இல்லாமல் இருந்திருந்தால் உங்களுக்கு பட வாய்ப்பு கிடைத்திருக்குமா என்று கலாய்த்து இருந்தனர். 



இந்நிலையில் சூர்யா சேதுபதியின் மற்றொரு கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  'நான் சின்ன வயசில் இருந்தே மிகவும் கஷ்டப்பட்டு தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன்.. என் அப்பா தினமும் எனக்கு 500 ரூபாய் தான் செலவுக்கு கொடுப்பார்.. அதனால் சினிமாவில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று வந்திருக்கிறேன்' என்று அவர் கூறியதாக சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இதனை இணையத்தில் பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர். 'மாதம் 15 ஆயிரம் செலவு செய்வது கடினமாக உள்ளதா', 'ஐயோ பாவம் ரொம்ப கஷ்டப்படுற குடும்பம் போல' என்று சூர்யாவை இணையத்தில் ரோல் செய்து வருகின்றனர்.


மேலும் படிக்க | பிக்பாஸ் 8: எவிக்ட் ஆன ரவீந்தர் குறித்த ‘இந்த’ உண்மை தெரியுமா உங்களுக்கு?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ