xதமிழ் திரையுலகின் பிரபல நடிகர் விக்ரம், மலையாள இயக்குநர் ஒருவர் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக பேச்சு அடிப்படுகிறது. அது மட்டுமன்றி, இதில் நாயகியாக ஒரு பெரிய நடிகை நடிக்க இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விக்ரம்:


தமிழ் சினிமாவின் திறமை மிகு நடிகர்களுள் ஒருவர் விக்ரம். கடின உழைப்பு, விடா முயற்சி, கதைகளை தேர்ந்தெடுத்தல் போன்ற பல விஷயங்களால் பிற ஹீரோக்களை விட இவர் தனித்து காணப்படுகிறார். இவர் ஹீரோவாக நடித்துள்ள ‘தங்கலான்’ திரைப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றன. இந்த படத்தை பா.ரஞ்சித் இயக்கியிருக்கிறார். இதில் மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளளனர். தங்கலான் பட பணிகள் தொடர்ந்து கொண்டிருக்க, விக்ரம் அடுத்து நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 


மேலும் படிக்க | சமந்தாவின் சிகிச்சைக்கு ரூ.25 கோடி பணம் கொடுத்த சூப்பர் ஸ்டார்? சமந்தாவின் மாஸ் ரிப்ளை..!


மலையாள இயக்குநருடன் விக்ரம்:


மலையாள சினிமாவின் வெற்றி இயக்குநர்களுள் ஒருவர், ஜூட் ஆண்டனி ஜோசப். இவர், மலையாள மொழியில் வெளியாகி வெற்ற பெற்ற படங்களான ஓம் சாந்தி ஓஷனா, 2018 உள்ளிட்ட சில படைப்புகளில் இணை இயக்குநராகவும் எழுத்தாளராகவும் பணிபுரிந்துள்ளார். இவர், விக்ரமை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படம் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


விஜய் சேதுபதியுடன் இணையும் விக்ரம்!


தமிழ் மட்டுமன்றி தற்போது இந்தி மொழி படங்களிலும் பிசியாக நடித்துக்கொண்டிருப்பவர் விஜய் சேதுபதி. சில ஆண்டுகளுக்கு முன்னர் வில்லன் நடிகராக அவதாரம் எடுத்த இவருக்கு தொடர்ந்து வில்லன் கதாப்பாத்திரங்களே கொடுக்கப்பட்டு வருகிறது. இவர் ஹீரோவாக நடிக்கும் படங்கள் பெரிதாக ஓடாத காரணத்தினால் அவரும் வில்லனாக நடிப்பதற்கு மறுப்பு தெரிவிப்பதில்லை. தற்போது மலையாள இயக்குநரான ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கும் படத்தில் விக்ரம் நடிப்பதாக தகவல் வெளியான நிலையில், அதில் விஜய் சேதுபதியும் நடிப்பதாக திரை வட்டாரங்களில் ரசிகர்கள் பேசிக்கொள்கின்றனர். இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறாரா அல்லது குணச்சித்திர வேடத்தில் வருகிறாரா என்பது தெரியவில்லை. 


கதாநாயகி இவரா..? 


தெலுங்கு சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த ராஷ்மிகா மந்தனாவிற்கு தமிழ் சினிமாவில் பெரிய வாசலை திறந்து வைத்தது, சுல்தான் படம். இதையடுத்து விஜய்யுடன் இவர் வாரிசு படத்தில் நடித்திருந்தார். இவருக்கு தமிழ் திரையுலகில் ரசிகர் கூட்டம் அதிகமாக இருப்பதால் தொடர்ந்து தமிழ் படங்களில் நடிப்பதற்கு ராஷ்மிகா தயங்குவதில்லை. இவரும் விக்ரம் நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகார்ப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் படிக்க | கமல்-ரஜினி to விஜய்-அஜித்..! இவர்கள் உண்மையில் நண்பர்களா..? எதிரிகளா..?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ