வேதனையின் உச்சத்தில் ராஷ்மிகா மந்தனா! சினிமாவை விட்டு விலகப்போகிறாரா?

ராஷ்மிகாவை க்ரஷ் என்று கூறிக்கொண்டு ரசிகர்கள் ஒருபுறம் புகழ்ந்து வந்தாலும் இவரது ஹேட்டர்ஸ் பலரும் இவரை பயங்கரமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.    

Written by - RK Spark | Last Updated : Jan 24, 2023, 09:18 AM IST
  • வாரிசு படத்தில் நடித்திருந்தார் ராஷ்மிகா.
  • இவரை பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்.
  • ட்ரோல் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
வேதனையின் உச்சத்தில் ராஷ்மிகா மந்தனா! சினிமாவை விட்டு விலகப்போகிறாரா? title=

தென்னிந்திய சினிமாவின் பிரபலமான நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா, பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார்.  இவரை ரசிகர்கள்  நேஷனல் க்ரஷ் என்றும், எக்ஸ்பிரஷன் குயின் என்றும் அழைக்கின்றனர்.  ராஷ்மிகாவிற்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.  சமீபத்தில் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராக இருக்கும் விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்திருந்தார், இதுவே விஜய்யுடன் இவர் நடிக்கும் முதல் படமாகும்.  வம்சி இயக்கத்தில் உருவான இந்த படம் உலகளவில் ரூ.250 கோடி பாக்ஸ் ஆபீஸில் வசூலை குவித்துள்ளது.  வாரிசு படத்தில் பெரியளவில் ராஷ்மிகாவிற்கு நடிப்பு இல்லை என்றாலும், விஜய் தனக்கு பிடித்த நடிகர் என்பதாலேயே அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.  தனக்கு பெரியளவில் ரோல் இல்லையென்றாலும் விஜய்யுடன் திரையில் இருந்தாலே போதும் என்பதால் தான் வாரிசு படத்தில் நடித்ததாக ராஷ்மிகாவே சமீபத்திய பேட்டியொன்றில் கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க | பாலிவுட் பாடலுக்கு நடனமாடிய பாகிஸ்தான் பெண்... வாயை பிளக்கும் நெட்டிசன்கள்! 

தென்னிந்திய சினிமாவில் குறுகிய காலத்தில் பெரும் உச்சம் தொட்டவர்களில் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் ஒருவர் என்பதில் சந்தேகத்திற்கிடமில்லை.  இவரை க்ரஷ் என்று கூறிக்கொண்டு ரசிகர்கள் ஒருபுறம் புகழ்ந்து வந்தாலும் இவரது ஹேட்டர்ஸ் பலரும் இவரை பயங்கரமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.  ராஷ்மிகாவின் சிரிப்பு, வொர்க்அவுட், பேச்சு, முகபாவனை என அனைத்தையும் சமீப காலமாக ஹேட்டர்ஸ் பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்.  தனக்கு வரும் மோசமான கமெண்டுகளால் மனமுடைந்து இருக்கும் ராஷ்மிகா தற்போது தனது மனக்குமுறலை சமீபத்திய பேட்டியொன்றில் வெளிப்படுத்தியுள்ளார்.  இதுகுறித்து அவர் கூறுகையில், "மக்களுக்கு என் உடலிலேயே பிரச்சனை இருக்கிறது.  நான் வொர்க்அவுட் செய்தால் ஆண் போல இருப்பதாக சொல்கிறார்கள், வொர்க்அவுட் செய்யாவிட்டால் குண்டாக இருப்பதாக சொல்கிறார்கள்.  நான் அதிகமாக பேசினால் க்ரிஞ்ச் என்று சொல்கிறார்கள், பேசவில்லை என்றால் திமிராக இருப்பதாக சொல்கிறார்கள்.  நான் மூச்சு விட்டாலும் அவர்களுக்கு பிரச்சனை நான் மூச்சு விடவில்லையென்றாலும் அவர்களுக்கு, நான் என்னதான் செய்வது?" என்று பேசி தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.

மக்கள் தன்னை பற்றி கூறும் கருத்துக்கள் சரியானதாக இருந்தால் நான் ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் இதுபோன்று தவறாக கூறுவது என் மனதை பாதிக்கிறது என்று கூறியுள்ளார்.  எப்போதும் ராஷ்மிகா குறும்புத்தனமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதை மட்டுமே பார்த்து வந்த ரசிகர்களுக்கு இவர் தற்போது இப்படி மனக்கலக்கத்துடன் பேசியிருப்பது ரசிகர்களை கண்கலங்க செய்து இருக்கிறது.

மேலும் படிக்க |  Athiya Shetty-KL Rahul Wedding: கே.எல்.ராகுலின் மனைவியாகும் அதியா ஷெட்டி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News