தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீ தேவி (54) கடந்த சனிக்கிழமை இரவு 11 மணியளவில் துபாயில் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலில் மரணமடைந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதலில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது பின்னர், உடற்கூறு ஆய்வில் அவரது ரத்தத்தில் ஆல்கஹால் கலந்திருந்ததாகவும், அதனால் மயங்கி தவறுதலாக குளியல் தொட்டியில் மூழ்கி இறந்ததாக என கூறப்பட்டது. 


அனைத்து விசாரணைக்கு பிறகு நேற்று இரவு நடிகை ஸ்ரீதேவியின் உடல் இந்தியா கொண்டுவரப்பட்டது.


அதையடுத்து, மும்பை அந்தேரியில் உள்ள செலிப்ரேஷன் விளையாட்டு மன்றத்தில் வைக்கப்பட்டிருந்தது.தற்போது ஸ்ரீதேவி பற்றிய பேச்சு தற்போது தான் ஓய்ந்துள்ளது. அவர் இறப்பில் மர்மம் இருப்பதாக பலரும் சந்தேகம் தெரிவித்துவந்த நிலையில் அவரின் உடல் மூன்று நாட்களுக்கு பிறகு இந்தியா கொண்டுவரப்பட்டு பிப்ரவரி 28-ம் தேதி தகனம் செய்யப்பட்டது.


தற்போது அந்த அஸ்தி ராமேஸ்வரத்தில் இன்று கரைக்கப்படவுள்ளது. அதற்காக ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் அஸ்தியை எடுத்துக்கொண்டு தமிழகம் வந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.