பாகுபலி திரைப்படத்துக்குப் பிறகு பான் இந்திய ஸ்டாராக உருவாகியிருக்கும் பிரபாஸ், புதிதாக நடித்திருக்கும் திரைப்படம் ராதே ஷ்யாம். மார்ச் 11 ஆம் தேதி இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகிறது. இதனையொட்டி, படபுரோமோஷனில் ஈடுபட்டு வரும் பிரபாஸ், மும்பையில் நடைபெற்ற ராதே ஷ்யாம் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | KGF2 படத்தின் டிரெய்லர் தேதி அறிவிப்பு..! பீஸ்ட் டிரெய்லர் எப்போது?


அப்போது, ராதே ஷ்யாமில் எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் கை ரேகை நிபுணராக நடித்துள்ளீர்கள், ஆனால் டிரெய்லரில் வரும் வசனத்தில் காதல் பற்றிய கணிப்பு சரியாக இருந்ததில்லை என கூறியிருக்கிறீர்கள். நிஜத்தில் காதல் பற்றிய உங்களுடைய கணிப்பு என்ன என நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரபாஸிடம் கேட்டார். இதற்கு பதிலளித்த பிரபாஸ், உண்மையை சொல்ல வேண்டும் என்றால், நிஜத்திலும் காதல் தொடர்பான கணிப்புகள் எப்போதும் தவறாகவே இருந்துள்ளன, அதனால்தான் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை" என நகைச்சுவையாக பதில் அளித்தார்.



பிரபாஸூக்கு இப்போது 42 வயதாகிறது. ஆனால் இதுவரை அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. அனுஷ்காவுக்கும் அவருக்கும் இடையே காதல் இருப்பதாக கிசுகிசுக்கள் வெளியானபோதும், இருவரும் அது குறித்து வாய் திறக்கவில்லை. பின்னர் அவர்கள் இருவர் தொடர்பான கிசுகிசுக்கள் காணாமல் போனது. ராதே ஷ்யாம் படத்தில் பிரபாஸூக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் படம் இந்திய மொழிகள் மட்டுமல்லாது சீனா மற்றும் ஜப்பானிய மொழிகளிலும் வெளியிடப்பட உள்ளது.  


மேலும் படிக்க | பொள்ளாச்சி சம்பவம் தான் எதற்கும் துணிந்தவன் படமா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR