தெலுங்கு திரையுலகில் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுல் ஒருவரான M ரத்னம் அவர்கள், நடிகர் பாலகிருஷ்ணாவிற்காக கதை ஒன்றினை தயாரித்து வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய இயக்குனர்களுடன் பணியாற்றியர் ரத்னம். SS ராஜமௌலி, ஸ்ரீரினு, போன்ற இயக்குனர்களின் திரைப்படங்களுக்கு திரை கதை எழுதியவர். இவரது வசனங்களால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். இவர் தற்போது டோலிவுட் சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணாவிற்காக கதை ஒன்றினை தயாரித்து வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த கதையானத., ராயல்சிம்மா பகுதியில் நடைப்பெரும் அரசியல் சம்பவங்களை பின்னணியாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


தற்போது பாலகிருஷ்ணா அவர்கள், தனது தந்தையும் ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான NTR அவர்களின் வாழ்க்கை படத்தில் நடித்து வருகின்றார். இயக்குனர் மாற்றம், நடிகர் தேர்வு என பல சர்ச்சைகளுக்கு பின்னர் உறுவாகி வரும் இத்திரைப்படத்தினை சாய் கொராப்பட்டி மற்றும் விஷ்ணு இந்தூரி ஆகியோர்களுடன் இணைந்து பாலகிருஷ்ணா தயாரித்து வருகின்றார். வரும் சங்க்ராத்திக்கு இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த படத்தினை அடுத்து இயக்குனர் VV விநாயக் இயக்கத்தில் தனது அடுத்தப் படத்தினை முடிக்கின்றார் பாலகிருஷ்ணா. இந்த இரண்டுப் படங்கள் முடித்தப் பின்னரே M ரத்னம் அவர்களின் கதையில் பாலகிருஷ்ணா நடிப்பார் என்பதால், இன்னும் சில மாதங்களுக்கு ரத்னம் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது!