அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அமுதாவும் அன்னலட்சுமியும்' சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமுதாவும் அன்னலட்சுமியும்: இன்றைய எபிசோட்


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் செந்தில் வேலையை விட்டு விட்டதாக சொல்ல அன்னலட்சுமி அதிர்ச்சி அடைந்தாள். இதனை தொடர்ந்து இன்றைய எபிசோடில் அன்னம் செந்தில் எப்படி வேலையை விடப் போச்சு என புலம்ப பாட்டி அவன் பார்த்துப்பான் என அன்னமிடம்சொல்கிறார். மேலும் அமுதா செந்திலிடம் ஏன் வேலையை விட்டீங்க என கேக்க, அது உனக்கு தேவை இல்லாத விஷயம் என பதிலடி கொடுக்கிறார். 



மேலும் படிக்க | 'சந்திரமுகி 2' படத்திற்கு தூங்காமல் பின்னணி இசையமைத்த கீரவாணி


அடுத்ததாக கிளாஸ் ரூமில் சில மாணவிகள் புது கணக்கு வாத்தியார் வர போறாரு, ஹாம் ஒர்க் செய்யலைன்னா அவர் டேபிள் மேல் ஏற்றி நிக்க வச்சிடுவாராம் என பில்டப்பாக கொடுத்து கொண்டிருக்க இதையெல்லாம் கேட்டு அமுதா கணக்கு புத்தகத்தை வேற வீட்ல வச்சிட்டு வந்துட்டோமே என பயப்படுகிறாள். 


இதையடுத்து அமுதா கிளாசில் உட்கார்ந்து ஹோம் வொர்க் செய்து கொண்டிருக்க செந்தில் பில்டப்புடன் வகுப்பிற்கு வருகிறான், அவனைப் பார்த்ததும் அமுதா ஷாக்காக செந்தில் அமுதாவிடம் இன்னும் ஏன் ஹோம் ஒர்க் எழுதலை என அதட்டி கேள்வி கேட்க அமுதா பம்மியபடி பதில் சொல்ல செந்தில் அதைப் பார்த்து ரசிக்கிறான். 



அதனை தொடர்ந்து செந்தில் வெளியே வர அமுதா பின்னால் ஓடி வந்து அவனை நிறுத்த செந்தில் அவளிடம் பாடத்துல சந்தேகம் இருந்தா கிளாசுலயே கேளும்மா என பில்டப் கொடுக்க அமுதா நடிக்காதீங்க என சொல்ல, செந்தில் இது நடிப்பு இல்ல அத்தனையும் உண்மை என சொல்ல அமுதா மரியாதையா சொல்றேன் நீங்க வேற ஸ்கூல் பாருங்க என சொல்கிறான். 


செந்தில் ஏன் கல்யாணம் ஆகவில்லை என சொன்ன என அமுதா அவனிடம் கேட்க அதற்கு நீ மட்டும் கல்யாணம் ஆகவில்லை என பொய் சொல்லலாமா? என கேட்கிறான். அப்போது அங்கு பாலா வர, அதை பார்த்து செந்தில் சமாளித்து பேசுகிறான். பாலா செந்திலிடம் என்ன சார் நல்ல மிரட்டி விட்டுட்டீங்களா என கேக்க, ஆமா சார் என்னை பார்த்தாலே இனி பயந்து ஓடுவா என பில்டப் கொடுக்கிறான்.


அதன் பிறகு செந்தில் வீட்டிற்கு வந்து தான் வேறு ஒரு பள்ளியில் வாத்தியாராகி விட்டதாக சொல்கிறான். மாணிக்கம் அப்பத்தாவிடம் அமுதா படிக்கிற ஸ்கூல்லயே வாத்தியாரா சேர்ந்துருக்கான் என்று சொல்ல அன்னம் செந்திலை திட்டுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.



அமுதாவும் அன்னலட்சுமியும்: சீரியலை எங்கு பார்ப்பது


அமுதவும் அன்னலட்சுமியும் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.


மேலும் படிக்க | ‘விடுதலை 2’ அப்டேட்: விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் தனுஷ் பட நடிகை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ