அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அமுதாவும் அன்னலட்சுமியும்' சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமுதாவும் அன்னலட்சுமியும்: இன்றைய எபிசோட்


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலின் வெள்ளிக்கிழமை எபிசோடில் வீட்டுக்கு வந்த நீதிபதி அமுதாவை கோர்ட்டுக்கு வர சொல்லி இருந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.


மேலும் படிக்க | ஹரிஷ் கல்யாணின் ‘LGM’ டிரெய்லரை நாளை வெளியிடுகிறார் எம்.எஸ்.தோனி


அமுதா கோர்ட்டுக்கு வர ஜட்ஜ் அமுதா எழுதிய பேப்பரை மீண்டும் கரெக்ஷன் பண்ண வேண்டும் என்று சொல்கிறார். அப்பொழுது ஒரு வக்கீல் மறுத்திருத்தம் அங்கே இருக்கும் ஆட்கள் தான் பண்ண வேண்டும் என்று சொல்ல ஜட்ஜ் “அதெல்லாம் முடியாது எல்லா பேப்பரும் கோர்ட்டுக்கு வரணும்” என்று சொல்லி ஆடர் போடுகிறார்.


அதனை தொடர்ந்து அமுதா  கோர்ட் வெளியே வந்து நின்று கொண்டிருக்க செந்தில் அமுதாவிடம் “எதுக்கு இந்த சின்ன விஷயத்தை இவ்வளவு பெருசா மாத்துற” என்று கேட்க. அமுதா “இப்பயும் என் மேல உனக்கு நம்பிக்கை வரவில்லையா" என்று கேள்வி கேட்கிறாள்.


அடுத்து கோர்ட்டுக்கு அமுதா எழுதிய பேப்பர்கள் வர நீதிபதி ‘இந்த பேப்பரை Correction பண்ண வாத்தியார் எங்கே” என்று கேட்க அவர் பயந்து கொண்டே அங்கே நின்று கொண்டிருக்கிறார். நீதிபதி வேறு ஒரு வாத்தியாரை வைத்து அந்த பேப்பரை திருத்த சொல்ல அவர் Correction பண்ணி முடிக்கிறார். அப்போது  நீதிபதி “எவ்வளவு மார்க் வந்து இருக்கிறது” என்று கேட்க. அவர் 50, 70 என்று மார்க்குகளை சொல்கிறார். 


நீதிபதி தவறாக திருத்திய அந்த வாத்தியாரை பார்த்து “வாத்தியாரோட கைல பிள்ளைகளோட மிகப்பெரிய எதிர்காலம் இருக்கு நீ பொறுப்பு இல்லாம இப்படி பண்ணி இருக்க.. இனிமேல் டீச்சராக இருக்க உனக்கு தகுதி கிடையாது.. நீ இனி எந்த ஸ்கூலயும் டீச்சரா பணிபுரிய கூடாது” என்று சொல்லி ஆர்டர் போடுகிறார். மேலும் நீதிபதி அமுதாவிடம் நீ பாஸ் ஆகிவிட்டாய் என்று சொல்ல அமுதா சந்தோசப்படுகிறாள். 


இதனை தொடர்ந்து நீதிபதி கல்வித்துறையில் இருந்து அமுதாவுக்கு சர்டிபிகேட் கொடுக்க ஆர்டர் போட அமுதா சந்தோசப்படுகிறாள். இதனை செல்வா பட்டாசு வெடித்துக் கொண்டாட சிதம்பரம் அனைவருக்கும் ஸ்வீட் கொடுத்து கொண்டாடுகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


அமுதாவும் அன்னலட்சுமியும்: சீரியலை எங்கு பார்ப்பது


அமுதவும் அன்னலட்சுமியும் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.


மேலும் படிக்க | 3 விருதுகள்.. கண்ணே கலைமானே படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ