Zee Tamil TV Serial: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நெஞ்சத்தை கிள்ளாதே. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கௌதம் மதுமிதாவை பார்க்க காலேஜ் கிளம்பி வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதாவது, மதுவை சந்திக்கும் கௌதம் உங்களுக்காக சில வரங்களை பார்த்திருப்பதாக சொல்லி போட்டோக்களை காட்ட மதுமிதா அதில் ஈடுபாடு இல்லாமல் இருக்கிறாள். எனக்கு என் வீட்டில் மாப்பிள்ளை பார்ப்பாங்க, நீங்க பார்க்க வேண்டாம் என்று சொல்ல கௌதம் டென்ஷனாகி விடுகிறான்.


அதனை தொடர்ந்து மதுவின் அம்மா மார்க்கெட்டில் இருந்து வந்து கொண்டிருக்கும் போது ப்ரோக்கரை பார்க்க என் பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க சொல்லி இருந்தேனே என்னாச்சு என்று கேட்க அவர் மாப்பிள்ளை வீட்டாருக்கு உங்க பொண்ணு அதே பிளாட்ல ஒரு பையனை காதலிச்ச விஷயம் தெரிந்து போச்சு என்று சொல்லி ஷாக் கொடுக்கிறார்.


அடுத்து ஆபிஸ் வந்த கௌதம் ஒருவரிடம் உனக்கு மார்க்கெட் ஹெட்டா ஹையர் போஸ்டிங் தரேன் என்று சொல்ல அந்த நபர் ரொம்ப நன்றி சார்.. என் வுட்பியும் ரொம்ப சந்தோச பாடுவாங்க என்று சொல்ல கௌதம் கல்யாணம் ஆகலனு தானே சொன்ன என்று கேட்க ஆமாம் கல்யாணம் ஆகல, ஆனால் என்கேஜ்மென்ட் முடிந்து விட்டது என்று சொல்கிறான். இதை கேட்டு எல்லாரும் சிரிக்கின்றனர்.


மறுபக்கம் மதுவும் அவளது அம்மாவும் வீட்டிற்கு வர அப்போ மதுவின் பழைய காதலனை பார்க்க மதுவின் அம்மா கோபப்பட்டு பேசுகிறாள். உன்னால் என் பொண்ணு வாழ்க்கையே போய்டுச்சு என்று சொல்ல அவன் நான் எதுவும் பண்ணல சாரி என்று சொல்ல மது அம்மாவை சமாதனம் செய்து அழைத்து வருகிறாள்.


அடுத்து கௌதம் ஆபிசில் கல்யாணம் ஆகாத பசங்க லிஸ்ட்டை எடுக்க சொல்ல சந்தோஷ் லிஸ்ட்டை கொண்டு வந்து கொடுக்க அதில் கௌதம் பெயர் மட்டுமே இருக்கிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


மேலும் படிக்க - உங்க வழிக்கு கொண்டு வருவதெல்லாம் ரொம்ப ஈசி... “நினைத்தேன் வந்தாய்” இன்றைய எபிசோட்