லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்த ‘நானும் ரெளடிதான், வேலைக்காரன் ஆகிய இரண்டு படங்களுக்கும் அனிருத் இசையமைத்தார். இரண்டுமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதையடுத்து, நயன்தாரா நடிபில் உருவாகிவரும் ‘கோலமாவு கோகிலா’ படத்திற்கும் அனிருத் இசையமைத்து வருகிறார். ரஜினி முதல் விஜய்சேதுபதி வரை அனைத்து முக்கிய நடிகர்களுடனும் ஜோடியாக நடித்துவிட்டார்.


இந்த நிலையில் ரஜினி-யின் கார்த்திக் சுப்புராஜ் படம், கமல்-ளின் ஷங்கர் படம், அஜித்-தின் சிவா படம் மற்றும் மம்முட்டி நடிக்கவுள்ள தெலுங்கு படம் ஆகிய படங்களில் நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானதை அடுத்து படப்பிடிப்பும் துவங்கியுள்ளது.


நடிகை நயன்தாரா தனது சிறந்த நடிப்பாற்றல் மூலம், பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டதன் மூலமாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் அவரை தேடி வந்தது.


தற்போது நயன்தாரா ஆங்கில பத்திரிகை ஒன்று நடத்திய வேர்ல்டு ஆப் வுமன் 2018 (World Of Women 2018) என்ற விருது விழாவில் கலந்து கொண்டார். அவருக்கு சினிமாவில் சாதித்து வரும் பெண் என்ற அடிப்படையில் விருது அளிக்கப்பட்டுள்ளது.


அந்த விருது விழாவில்  நயன்தாரா பேசுகையில்...! 


“எனது தாய், சகோதரர், என் வருங்கால கணவருக்கு நன்றி. நான் இப்போது வாங்கியுள்ள இந்த விருது சினிமா விருதுகளிடம் இருந்து மிகவும் மாறுபட்டது. நான் வீட்டுக்கு திரும்பியது என்னை சுற்றி  பல சாதனை பெண்கள் வலம் வருவார்கள். 


அவர்களை பார்த்த பின்பு நான் மீண்டும் உத்வேகம் அடைந்து எனது வேலையை உற்சாகத்துடன் ஆரம்பிப்பேன்” என்று தெரிவித்தார்.


பொதுவாக நயன்தாரா தனது காதல் விவகாரத்தை வெளிப்படையாக இதுவரை அறிவிக்கவில்லை. அதேநேரம் விக்னேஷ் சிவனைத் தான் நயன்தாரா காதலிக்கிறார் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம்.


அதனை நிரூபிக்கும் வகையில் அண்மையில் நியூயார்க்கில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் சேர்ந்து சுற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்நிலையில் முதன் முறையாக தனது காதலை ஒப்புக்கொள்ளும் விதமாக வருங்கால கணவரான விக்னேஷ் சிவனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.