நியூயார்க்: அமெரிக்க வாழ் இந்தியர் ஒருவர், பாலியல் புகார் ஒன்றில் சிக்கியுள்ளார். 70 வயதான இந்திய-அமெரிக்கர் மோட்டல் ஒன்றில் மேலாளராக வேலை பார்த்துவந்தார். பணியாளரை அடிமைப்படுத்துதல் அடிமைத்தனம் அல்லது கட்டாய உழைப்பு தொடர்பான கடத்தல் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய குடிமகனும் சட்டப்பூர்வ அமெரிக்க நிரந்தர குடியிருப்பாளருமான ஷ்ரீஷ் திவாரி (Shreesh Tiwari) என்பவர், "வணிக ரீதியான பாலியல் செயல்களில்" ஈடுபடும்படி கட்டாயப்படுத்தி, ஒரு பெண் மீதான அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதையும் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.


குற்றச்சாட்டை ஒப்புக் கொண்ட ஷ்ரீஷ் திவாரி


"எந்தவிதமான மனித கடத்தலையும் நாங்கள் பொறுத்துக் கொள்ளமாட்டோம், மேலும் சமூகத்தில் குற்றத்தால் பாதிக்கப்பட்ட அனைவரையும் பாதுகாப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டை இந்த நம்பிக்கை வலுப்படுத்துகிறது. அவர்கள், எந்த அந்தஸ்தில் இருந்தாலும் கவலையில்லை என ஜார்ஜியாவின் வடக்கு மாவட்டத்திற்கான அமெரிக்க வழக்கறிஞர் ரியான் கே புக்கானன் நீதிமன்றத்தில் கூறினார்.


மேலும் படிக்க | பலி எண்ணிக்கை 288இல் இருந்து 275ஆக குறைந்தது எப்படி? விளக்கமளிக்கும் ஒடிசா அரசு


நீதிமன்ற ஆவணங்களின்படி, திவாரி 2020 ஆம் ஆண்டில் ஜார்ஜியாவின் கார்ட்டர்ஸ்வில்லில் உள்ள Budgetel Motelஇல் நிர்வாகியாக இருந்தார். அப்போது, பாதிக்கப்பட்டவரை மோட்டலில் சுத்தம் செய்பவராக வேலைக்கு அமர்த்தினார்.


அங்கு வேலைக்கு வருவதற்கு முன்பு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வீடு எதுவும் இல்லை என்பதையும், அவர் ஹெராயின் போதைக்கு அடிமையானவர் என்றும், அதனால், தன் இளம் குழந்தையின் பாதுகாக்கும் பொறுப்பை இழந்தார் என்பதைய்ம் ஷ்ரீஷ் திவாரி அறிந்திருந்தார்.


பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஊதியம், ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கொடுப்பதாகவும், தனது குழந்தையின் பாதுகாப்பை மீண்டும் பெற உதவும் வகையில் வழக்கறிஞரை ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்த ஷ்ரீஷ் திவாரி, பாதிக்கப்பட்டவரை துப்புரவுப் பணியாளராக பணியமர்த்தினார்.


ஆனால், வேலைக்கு வந்த பிறகு, தான் கொடுத்த வாக்குறுதிகளைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, மோட்டல் விருந்தினர்கள் மற்றும் ஊழியர்களுடன் பாதிக்கப்பட்டவரின் தொடர்புகளைக் கண்காணித்து அவர்களுடன் பேசுவதைத் தடை செய்தார்.


மேலும் படிக்க | ஒடிசா ரயில் விபத்து: சிக்னல் கோளாறா... மனித தவறா... - சாத்தியக்கூறுகள் என்ன?


கூடுதலாக, திவாரி பல முறை, பாலியல் ரீதியில் சீண்டியதாகவும், தனது பேச்சை மீறினால், குடியிருக்கும் இடத்தில் இருந்து வெளியேற்றுவதாகவும், சட்ட அமலாக்க மற்றும் குழந்தைகள் நல நிறுவனங்களுக்கு புகாரளிக்கப்பதாகவும் அச்சுறுத்தினார்,  


இறுதியில், தனது மோட்டல் அறையிலிருந்து பாதிக்கப்பட்டவரை வெளியேற்றியதோடு, இரவில் அறைக்கு வெளியே பூட்டி, பாலியல் ரீதியாக ஒத்துழப்பு வழங்குமாறு கட்டாயப்படுத்தினார் என்று, உள்ளூர் ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.


மேலும், இதேபோல திவாரியின் வலையில் பல பெண்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது, இது தொடர்பாக விசாரணைகள் நடந்து வருகின்றன. இந்த வழக்கில் ஷ்ரீஷ் திவாரிக்கு என்ன தண்டனை வழங்குவது என்று செப்டம்பர் 6 ஆம் தேதி நீதிமன்றம் அறிவிக்கும்.. அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், அத்துடன் $250,000 அபராதமும் விதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.


பாதிக்கப்பட்டவர்களுக்கு 40,000 டாலர்களை கட்டாயமாக திருப்பிச் செலுத்த திவாரி ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | Zero Gravity உள்ள விண்வெளியில் உடல் உறவு சாத்தியமா; விஞ்ஞானிகள் கூறுவது என்ன.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ