பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கித் தவிக்கும் நிலையில், நிலைமையை சீராக்கும் முயற்சிகளில் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளது. இலங்கையின் நிதியமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவுடனான ஆரம்ப கட்ட கலந்துரையாடல் "பயனுள்ளதாக" இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1948ம் ஆண்டு பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து இலங்கை முன்னெப்போதும் இல்லாத பொருளாதாரக் சிக்கலை சந்தித்து வருகிறது. அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் நெருக்கடி நிலை ஏற்பட்டு, அத்தியாவசிய உணவுகள் மற்றும் எரிபொருளின் இறக்குமதிக்கு பணம் செலுத்த முடியாமல் போனதால், கடுமையான தட்டுப்பாடு நிலகிறது. எனவே, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிபொருளின் விலை விண்ணை தொட்டுள்ளது.


மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட சப்ரி மற்றும் அவரது தூதுக்குழுவினர் தற்போது வாஷிங்டனில் உள்ளனர். அங்கு அவர்கள் IMF என்னும் சர்வதேச செலாவணி நிதியத்தின் உதவியை பெற கலந்துரையாடல்களை நடத்தினர்.


மேலும் படிக்க | Srilanka Crisis: அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ள பிரதமர் ராஜபக்‌ஷ பரிந்துரை


சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் கூடிய திட்டம் தொடர்பாக இலங்கைப் பிரதிநிதிகளும் சர்வதேச நாணய நிதியக் குழுவும் பயனுள்ள ஆலோசனைகளைகளை மேற்கொண்டனர். 


இலங்கையின் பெருகிவரும் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க குறைந்தபட்சம் 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படுகிறது. மேலும் நிதி அமைச்சர் சப்ரி, IMF தவிர உலக வங்கி மற்றும் சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுடன் நிதி உதவிக்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.


இலங்கை நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு, சம்பந்தப்ப்ட்ட அனைத்து தரப்பினரும் இணைந்து ஒத்துழைப்புடன் செயல்படுவதன் மூலம் நிலைமையை சரி செய்ய முழு முயற்சி மேற்கொள்ளப்படும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், சனிக்கிழமையன்று, இலங்கைக்கு எரிபொருள் இறக்குமதிக்கு உதவுவதற்காக மேலும் 50 கோடி அமெரிக்க டாலர் கடன் வழங்க இந்தியா ஒப்புக்கொண்டது.


நெருக்கடியான நேரத்தில் பொருளாதார மீட்சி மற்றும் கடன் மறுசீரமைப்புக்கான முதலீடுகள், தொழில்நுட்ப பரிமாற்றங்கள் மற்றும் நிதியுதவிகளை வரவேற்பதாக சனிக்கிழமையன்று இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.


முன்னெப்போதும் இல்லாத நிதி நெருக்கடியால் உணவுப் பற்றாக்குறை, எரிபொருட்களின் விலை உயர்வு மற்றும் பெரும் மின்வெட்டு போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், சமீபத்திய வாரங்களில் மிகக்பெரிய அளவில் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களை இலங்கை கண்டு வருகிறது.


மேலும் படிக்க | Srilanka Crisis: வரும் நாட்களில் வரிகள் மேலும் உயரும்; இலங்கை நிதி அமைச்சர் கொடுக்கும் அதிர்ச்சி


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR