இந்த 7 விஷயங்களை கவனிச்சீங்கங்கனா, காதலரா இருந்தாலும் பிரிந்துவிடுங்கள்..!

Sun, 04 Aug 2024-3:16 pm,

எந்தவொரு உறவாக இருந்தாலும் அதில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலைத்திருக்க வேண்டும். அப்படியான உணர்வு இல்லை என்றால் அந்த உறவில் இருந்து விலகிவிடுவதே நல்லது. 

பேச வரும்போது அதனை புறக்கணிப்பது, அன்பு, கவலை என எந்தவொரு உணர்வையும் பகிர்ந்து கொள்ள வரும்போது புறக்கணிப்பது தொடர்ந்து நடத்தால் அந்த உறவு நீண்டகாலத்துக்கு சரியாக இருக்காது.

எந்த வேலை செய்தாலும் குறை சொல்லிக் கொண்டே இருப்பது, விமர்சிப்பதை மட்டுமே தொழிலாக வைத்துக் கொள்வதுபோல் நடந்து கொண்டால் அந்த உறவு யாராக இருந்தாலும் நீங்கள் விலகியிருங்கள். சிறிதளவேனும் பாராட்டும், அரவணைப்பும் இருப்பது அவசியம்.

சுயமரியாதையை சீண்டும் வகையில் நடந்து கொள்வது, எப்போதும் மகிழ்ச்சியற்ற நிலைக்கு இட்டுச் செல்வது என இருந்தால் அந்த உறவு கசப்பான நினைவுகளையே சுமந்து கொண்டிருக்கும். அது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சிறந்ததாக இருக்காது.

சிறிய விஷயங்களைக்கூட பாராட்டி அன்பு பரிமாறிக் கொள்வது என்பது காதல் மற்றும் நட்பில் இருக்க வேண்டிய மிக முக்கியமான குணாதிசயம். அப்படியான அணுகுமுறைகள் ஏதும் உங்கள் உறவில் இல்லையென்றால், அந்த உறவை மறுபரிசீலனை செய்யலாம். 

நம்பிக்கைகளை சிதைக்கும் வகையில் நடந்து கொள்வது, பழி தீர்ப்பதுபோல் நடந்து கொள்வது, வஞ்சம் வைத்து செயல்படுவது போன்ற நிகழ்வுகளை எதிர்கொண்டால் கொஞ்சம்கூட யோசிக்காமல் நீங்கள் அந்த உறவில் இருந்து விலகிவிடுங்கள். 

 

எப்போதும் பழைய பிரச்சனைகள் கொண்டு வந்து சண்டை போட முயற்சிப்பது, தீர்க்கப்படாத சிக்கல்களை வைத்து காயப்படுத்த நினைப்பது ஆகியவை உறவில் இருந்தால் அந்த உறவும் உங்களின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நன்றாக இருக்காது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link