செப்டம்பரில் டிஏ ஹைக்: மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் எவ்வளவு உயரும்? முழு கணக்கீடு இதோ

Thu, 15 Aug 2024-9:58 am,

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மிக நல்ல செய்தி உள்ளது. அவர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த ஒரு நல்ல செய்தி அவர்களுக்கு கிடைத்துள்ளது. இதன் மூலம் பொருளாதார ரீதியாக அவர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம் கிடைக்கவுள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல், ஓய்வூதியதாரர்களுக்கும் இது நிவாரணம் அளிக்கும். ஊழியர்களுக்கு கிடைத்துள்ள நல்ல செய்தி பற்றி இங்கே காணலாம்.

ஜூலை 2024 -க்கான அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய ஒரு அப்டேட் கிடைத்துள்ளது. இதற்கான அறிவிப்பு எப்போது வரும் என ஊழியர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கிறார்கள். செப்டம்பர் தொடக்கத்தில் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (Dearness Allowance) மற்றும் அகவிலை நிவாரணம் (Dearness Relief) பற்றிய அறிவிப்பு வெளியாகும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் இந்த முறை டிஏ (DA) மற்றும் டிஆர் (DR) ஆகிய இரண்டையும் 3% அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகின்றது. அகவிலைப்படி 3% அதிகரிக்கப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் 53% ஆக அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

7வது ஊதியக்குழுவின் படி, தொழிலாளர் அமைச்சகத்தின் மூலம் வெளியிடப்படும் ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்களின் அடிப்படையில் அகவிலைப்படி தீர்மானிக்கப்படுகின்றது. ஜனவரி மாத அகவிலைப்படி முந்தைய ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் (AICPI Index) அடிப்படையிலும், ஜூலை மாத அகவிலைப்படி ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் (AICPI Index) அடிப்படையிலும் கணக்கிடைப்படுகின்றது.

சமீபத்தில் ஜூன் 2024 -க்கான ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள் வெளியிடப்பட்டன. இதைத் தொடர்ந்து அகவிலைப்படி அதிகரிப்பு குறித்த தெளிவு கிடைத்துள்ளது. டிசம்பர் 2023 முதல் ஜூன் 2024 வரை, CPI-IW 2.6 புள்ளிகள் உயர்ந்துள்ளது. இது 138.8 இல் இருந்து 141.4 ஆக அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, DA உயர்வின் சதவீதம் 50.28% இல் இருந்து 53.36% ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 1, 2024 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 50% ஆக உயர்த்தப்பட்டது. டிஎ 50% ஐ எட்டிய நிலையில், கடந்த சில மாதங்களில் வீட்டு வாடகைப்படி (HRA) உட்பட பல அலவன்ஸ்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

பல்வேறு துறைகளில் சில்லறை விலையில் ஏற்படும் மாற்றத்தைக் கண்காணிக்கும் அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI) அடிப்படையில் டிஎ உயர்வு உள்ளது. முன்னதாக, அடிப்படை ஆண்டு 2001 உடன் நுகர்வோர் விலைக் குறியீட்டைப் பயன்படுத்தி டிஏ அதிகரிப்பு தீர்மானிக்கப்பட்டது. இருப்பினும், செப்டம்பர் 2020 முதல் டிஏவைக் கணக்கிடுவதற்கு புதிய நுகர்வோர் விலைக் குறியீட்டுக்கு மாறியுள்ளது. இப்போது 2016 அடிப்படை ஆண்டைக் கொண்டு கணக்கீடு செய்யப்படுகின்றது.

தற்போது அகவிலைபப்டி 3% அதிகரித்தால் ஊழியர்களின் ஊதிய உயர்வு கணக்கீடு எவ்வளவு இருக்கும் என்பதை சில உதாரணங்களின் மூலம் புரிந்துகொள்ளலாம். ஒரு மத்திய அரசு ஊழியரின் அடிப்படை ஊதியம் ரூ.18,000 என வைத்துக்கொள்வோம், ஜூலை திருத்தத்திற்குப் பிறகு, 3% டிஏ உயர்வால் அவர்களின் மொத்த சம்பளம் ரூ 540 அதிகரிக்கும். இந்த அதிகரிப்பு மூலம் ஊழியருக்கு ஆண்டுக்கு ரூ.6,480 கூடுதல் வருமானம் கிடைக்கும். ரூ 56,900 அடிப்படை சம்பளம் பெறும் பணியாளர்களுக்கு டிஏ உயர்வு மூலம் சம்பளம் மாதம் ரூ.1,707, ஆண்டுக்கு ரூ.20,484 உயரும்.

DA மற்றும் DR 50% வரம்பைத் தாடினால் நிலையில், DA மற்றும் DR தானாகவே அடிப்படை ஊதியத்தில் இணைக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அடிப்படை சம்பளம் உயர்த்தப்படும் என்று ஊகங்கள் உள்ளன. இருப்பினும், DA மற்றும் DR திருத்தத்தில் அரசாங்கம் இதுவரை எந்த மாற்றத்தையும் அறிவிக்கவில்லை.

ஜூலை 2024 -இல் அகவிலைப்படி 3% அதிகரிக்கப்பட்டால், ஊழியர்கள் மிகப்பெரிய சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். இதற்கான கணக்கீட்டை மேலே பார்த்தோம். இது பணவீக்கம் மற்றும் விலைவாசியால் அவதியில் இருக்கும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு (Pensioners) மிகப்பெரிய நிவாரணமாக அமையும்.

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link