அகவிலைப்படி உயர்வு... அமைச்சரவை கூட்டத்தில் இன்று முக்கிய முடிவு: சம்பள உயர்வு கணக்கீடு இதோ

Wed, 09 Oct 2024-9:20 am,

1 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு பெரிய செய்தி உள்ளது. அகவிலைப்படி உயர்வை அரசு அக்டோபர் 9, அதாவது இன்று வெளியிடக்கூடும் என கூறப்படுகின்றது. 

இன்று தில்லியில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அறிவிப்பை அரசு வெளியிடும் என கூறப்படுகின்றது. இதற்காக ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் நீண்ட நாட்களாக காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

7வது ஊதியக் குழு: அகவிலைப்படியில் 3 முதல் 4 சதவீத அதிகரிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அதிகரிப்புக்கு பின்னர் மத்திய அரசு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் (Dearness Relief) ஆகியவை 53%-54% ஆக அதிகரிக்கும். 

இதற்கு முன்னர் ஜனவரி மாதம் அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 4% அதிகரித்தது. இதைத் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களின் டிஏ மற்றும் ஓய்வூதியதாரர்களின் டிஆர் இரண்டும் 50% ஆக உயர்ந்தன. இதற்கான அறிவிப்பு மார்ச் 2024 -இல் வெளிவந்தது.

தற்போது ஜூலை 2024 -க்கான டிஏ உயர்வுக்காக (DA Hike) அனைவரும் காத்திருக்கிறார்கள். ஜனவரி 2024 முதல் ஜூன் 2024 வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்களின் அடிப்படையில், அகவிலைப்படி 3%-4% அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

அகவிலைப்படி எப்போது அறிவிக்கப்பட்டாலும், ஜூலை முதலான டிஏ அரியர் (DA Arrears) தொகை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கும். இதன் காரணமாக அடுத்த மாத சம்பளத்தில் நல்ல ஏற்றத்தை காண முடியும்.

பணவீக்கம் அதிகரிக்கும் போது, அரசு ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தை பராமரிக்க அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இந்த கொடுப்பனவு அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படுகிறது.

நாட்டின் அப்போதைய பணவீக்கத்தின் படி 6 மாதங்களுக்கு ஒரு முறை அதன் கணக்கீடு செய்யப்படுகிறது. இது அந்தந்த ஊதிய விகிதத்தின் அடிப்படையில் ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தின் படி கணக்கிடப்படுகிறது. நகர்ப்புற, செமி நகர்ப்புற அல்லது கிராமப்புறங்களில் உள்ள ஊழியர்களுக்கு அகவிலைப்படி வேறுபட்டிருக்கலாம்.

மத்திய அரசு ஊழியர்களுக்காக சூத்திரம்: [(அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI) கடந்த 12 மாதங்களின் சராசரி – 115.76)/115.76]×100 / பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கான கணக்கீடு: (கடந்த 3 மாத நுகர்வோர் விலைக் குறியீட்டின் சராசரி (அடிப்படை ஆண்டு 2001=100)- 126.33 ))x100.

சம்பள உயர்வு: சம்பள உயர்வு கணக்கீடு: ஒரு மத்திய அரசு ஊழியரின் அடிப்படை சம்பளம் (Basic Salary) 18,000 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். அகவிலைப்படி 3% அதிகரித்தால் அவருக்கு சம்பளத்தில் ரூ.540 மாத அதிகரிப்பு இருக்கும். ஆண்டு அதிகரிப்பு ரூ.6,480 ஆக இருக்கும். அகவிலைப்படி 4% அதிகரித்தால், அவரது மாத சம்பளத்தில் 720 ரூபாய் அதிகரிப்பு இருக்கும். ஆண்டு சம்பளம் ரூ.7,440 அதிகரிக்கும்.

 

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link