மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த மாதம் டிஏ ஹைக், அசத்தல் ஊதிய உயர்வு: முழு கணக்கீடு இதோ

Thu, 19 Sep 2024-12:01 pm,

மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்புக்காக காத்திருக்கிறார்கள். அரசாங்கம் கூடிய விரைவில் இந்த அறிவிப்பை வெளியிடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டிஏ ஹைக் அறிவிப்பு எப்போது வரும்? டிஏ ஹைக் எவ்வளவு இருக்கும்? சமீபத்திய புதுப்பித்தல்களை இங்கே காணலாம்.

இன்னும் சில நாட்களில் பண்டிகை காலம் துவங்கவுள்ளது. இதை ஒட்டி அரசாங்கம் டிஏ உயர்வுக்கான (DA Hike) அறிவிப்பை வெளியிடும் என கூறப்படுகின்றது. நவராத்திரி நேரத்திலோ அல்லது தீபாவளிக்கு முன்னதாகவோ இந்த செய்தி மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கலாம். 

ஜூலை 2024-க்கான அகவிலைப்படி அதிகரிபுக்காக மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் (Pensioners) நீண்ட நாட்களாக காத்திருக்கிறார்கள். எனினும், அரசு தரப்பிலிருந்து இன்னும் இது குறித்த எந்த வித அறிவிப்பும்  வரவில்லை. மோடி அரசு நவராத்திரி நேரத்தில் அகவிலைப்படியை அதிகரிக்கலாம் என்று ஊகங்கள் உள்ளன.

மோடி அமைச்சரவை கூட்டம் செப்டம்பர் 25 அல்லது அக்டோபர் 2 ஆம் தேதி நடக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அகவிலைப்படியை உயர்த்தும் திட்டம் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும். இந்த கூட்டத்தில் அகவிலைப்படியை உயர்த்தும் திட்டத்திற்கு மோடி அரசு ஒப்புதல் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாத ஊதியம்: ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) தரவுகளின் அடிப்படையில் அரசாங்கம் இந்த முறை அகவிலைப்படியை 3-4% அதிகரிக்கலாம் என கூறப்படுகின்றது. இதன் மூலம் ஊழியர்களின் மாத ஊதியத்தில் நல்ல ஏற்றம் இருக்கும்.

அகவிலைப்படி 3% அதிகரிக்கப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் (Dearness Reilef) 53% ஆக உயரும். இது 4% அதிகரித்தால், டிஏ மற்றும் டிஆர் 54% ஆக அதிகரிக்கும். 

முன்னதாக, 7வது ஊதியக் குழுவின் படி, ஜனவரி 2024 -இல் அகவிலைப்படி 4% அதிகரித்தது. இதன் பிறகு அரசு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் 50% ஆக ஏற்றம் கண்டது. இதற்கான அறிவிப்பு மார்ச் 2024 -இல் வந்தது.

 

சம்பள உயர்வு கணக்கீடு: அகவிலைப்படி 3% அதிகரித்தால் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்? ஒர் உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். ஒரு ஊழியரின் மாத சம்பளம் ரூ. 50,000 என்றால், அவரது மாத சம்பளத்தில் தோராயமாக சுமார் ரூ.1,500 அதிகரிப்பு இருக்கும். அதாவது ஆண்டுக்கு சுமார் ரூ.18,000 அதிகரிப்பு இருக்கும். இது ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமையும். 

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரண (DR) விகிதங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை மாற்றப்படுகின்றன. இந்த மாற்றம் பணியாளர் அமைச்சகத்தால் வெளியிடப்படும் ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) விகிதங்களின் அடிப்படையில் செய்யப்படுகின்றது. 

ஓய்வூதியதாரர்களின் மாத ஓய்வூதியத்திலும் நல்ல ஏற்றம் இருக்கும். ஓய்வூதியம் பெறுபவரின் அடிப்படை ஓய்வூதியம் ரூ.25,000 எனில், அவருக்கு 50 சதவீதத்தின்படி ரூ.12,500 அகவிலைப்படி வழங்கப்படும். அகவிலைப்படி 53% ஆக அதிகரித்தால், அவருக்கு ரூ.13,250 கிடைக்கும். 

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link