8வது ஊதுயக்குழு: பட்ஜெட் 2025 -இல் குட் நியூஸ்? அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்!!

Tue, 22 Oct 2024-8:54 am,

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நீண்ட காலமாக 8வது ஊதியக்குழு குறித்த அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர். இந்த நிலையில் புதிய ஊதியக்குழுவின் உருவாக்கம் குறித்த சில அப்டேட்கள் வந்துள்ளன. இது ஊழியர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இதை பற்றி இந்த பதிவில் காணலாம். 

 

அடுத்த ஆண்டு துவக்கத்தில், குறிப்பாக கூற வேண்டுமானால், மத்திய பட்ஜெட் 2025 -இல் இதற்கான அறிவிப்பை அரசாங்கம் வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. 2024 ஆம் ஆண்டு பாஜக தலைமையிலான அரசு மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டிலேயே 8வது ஊதியக்குழுவுக்கான அறிவிப்பு வரும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி நடக்கவில்லை.

பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன. 7வது ஊதியக்குழுவுக்கான அறிவிப்பு 2014 ஆம் ஆண்டு வந்து, 2016 ஆம் ஆண்டில் அமலுக்கு வந்தது. அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு 8வது ஊதியக்குழு அமலுக்கு வரவேண்டும். அதற்கான அறிவிப்பு இப்போது வந்து குழு அமைக்கப்பட்டால்தான் அதற்கான ஆயத்தப்பணிகளை 2026 ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்ற முடியும்.

புதிய ஊதியக்குழுவில் ஊதிய அமைப்பில் மாற்றம் செய்யப்படும். அடிப்படை சம்பளம், கொடிப்பனவுகள் (Allowances) என அனைத்திலும் திருத்தம் செய்யப்படும். அதன் பின்னர் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்திலும் ஓய்வூதியதாரர்க்களின் (Pensioners) ஓய்வூதியத்திலும் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும்.

8வது ஊதியக்குழுவில் மத்திய அரசு ஃபிட்மெண்ட் ஃபாக்டரை 1.92 ஆக நிர்ணயிக்கலாம் என கூறப்படுகின்றது. எனினும், ஊழியர் சங்கங்கள் இதை 3.68  ஆக அதிகரிக்க வேண்டும் என கூறி வருகின்றன. 7வது ஊதியக்குழு அமைக்கப்பட்ட போதே 3.68 ஃபிட்மெண்ட் ஃபாக்டருக்கான கோரிக்கை இருந்தது.  எனினும், அரசாங்கம் இறுதியில் ஃபிட்மென்ட் ஃபாக்டரை 2.57 ஆகவே நிர்ணயித்தது.

7வது ஊதியக்குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 ஆனதைத் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் மாதம் ஒன்றுக்கு ரூ.7,000 -இலிருந்து ரூ.18,000 ஆக உயர்ந்தது. ஓய்வு பெற்றவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.3,500 -இல் இருந்து ரூ.9,000 ஆக உயர்ந்தது.  

 

சம்பள உயர்வு: ஃபிட்மெண்ட் ஃபாக்டர் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களைக் கணக்கிடுவதற்கான ஒரு முக்கியமான பெருக்கியாக செயல்படுகிறது. 8வது ஊதியக் குழுவில்  சம்பளத்தை கணக்கிடுவதற்கு 1.92 ஃபிட்மென்ட் ஃபாக்டர் நிர்ணயிக்கபட்டால், தற்போது ரூ.18,000 ஆக உள்ள குறைந்தபட்ச சம்பளம் தோராயமாக ரூ.34,560 ஆக உயரும்.

ஓய்வூதியம் பெறுவோரின் குறைந்தபட்ச ஓய்வூதியம் (Minimum Pension) தற்போது  ரூ.9,000 ஆக உள்ளது. ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.92 ஆக நிர்ணயிக்கப்பட்டால் இது ரூ.17,280 ஆக அதிகரிக்கலாம்.

 

8வது ஊதியக்குழு அமைக்கப்பட்டவுடன், அந்த குழு  பல்வேறு பொருளாதார நிலைமைகளை ஆய்வு செய்து அதன் படி கணக்கீடுகளை தயார் செய்து தனது அறிக்கையை சமர்ப்பிக்கும். இதற்கு முந்தை ஊதியக்குழுக்கள் இதற்கு கணிசமான நேரத்தை எடுத்துள்ளன. அதன் பிறகு அரசு அதை ஆய்வு செய்து தனது ஒப்புதலை அளிக்கும்.

 

இதற்கிடையில், 7வது ஊதியக்குழுவின் படி, ஜூலை 2024 -க்கான 3% அகவிலைப்படி உயர்வு அதாவது 3% டிஏ உயர்வுக்கான (DA Hike) அறிவிப்பு சென்ற வாரம் வந்தது. இதைத் தொட்ர்ந்து மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் (Dearness Relief) ஆகியவை 53% ஆக உயர்ந்துள்ளன.

 

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.   

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link