மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு தீபாவளி பரிசாக வருகிறதா 8வது ஊதியக்குழு? லேட்டஸ்ட் அப்டேட்

Sun, 29 Sep 2024-1:34 pm,

நீங்கள் மத்திய அரசு ஊழியரா? உங்கள் வீட்டில் யாரேனும் மத்திய பணிகளில் இருக்கிறார்களா? அப்படியென்றால் உங்களுக்கு இந்த செய்தி பயனுள்ளதாக இருக்கும். மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய அப்டேட் உள்ளது. அது பற்றி இங்கே காணலாம்.

தீபாவளியின் போது மத்திய அரசு, 8வது ஊதியக்குழு குறித்த ஒரு முக்கிய அறுவிப்பை வெளியிடக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், இது குறித்து அரசாங்கம் இன்னும் அதிகாரப்பூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை. ஆனால், தீபாவளியில் 8வது ஊதியக் குழுவின் வடிவில் ஒரு அற்புதமான பரிசு கிடைக்கப் போவதாக வெகுவாக கூறப்பட்டு வருகின்றது.

புதிய ஊதியக்குழு அமைக்கப்பட்டால், லெவல்-1 ஊழியர்களின் சம்பளம் நேரடியாக ரூ.8,500 வரை உயரும். இந்த செய்தி லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு (Pensioners) மகிழ்ச்சியை அளிக்கும். நாட்டின் கோடிக்கணக்கான ஊழியர்களுக்கு அரசாங்கம் ஒரு பெரிய தீபாவளி பரிசை வழங்கப் போவதாக வட்டாரங்கள் நம்புகின்றன.

ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் 8வது ஊதியக்குழு குறித்த அறிவிப்பு வரும் என வெகுவாக நம்பப்பட்டது. ஆனால் அது வராமல் போனது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. தற்போது மீண்டும் அதை அமல்படுத்த அரசு தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

8வது ஊதியக்குழு அமைக்கப்பட்டால், 1 கோடிக்கும் மேற்பட்ட மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். இதில் சுமார் 49 லட்சம் ஊழியர்களும், 68 லட்சம் ஓய்வூதியதாரர்களும் அடங்குவர். இதற்கான ஊழியர் சங்கங்கள் மத்திய அரசிடம் தொடர்ந்து கொரிக்கை விடுத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

8வது ஊதியக் குழு அமைக்கப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதிய பலன்களில் திருத்தம் செய்யப்படும். இதன் மூலம் நிதி நெருக்கடியில் இருக்கும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

வழக்கமாக, 10 வருடங்களுக்கு ஒரு முறை அரசாங்கம், ஒரு புதிய ஊதியக் குழுவை அமைக்கிறது. இந்த குழு, ஊழியர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் பிற வசதிகளை மதிப்பாய்வு செய்து, சம்பளத்தில் தேவையான மாற்றங்களை பரிந்துரைக்கிறது. அதன் பின்னர் அரசு அதை அமல்படுத்துகிறது.

இதற்கு முன்னர், 2014 இல் இவை திருத்தப்பட்டு, 2016 ஆம் ஆண்டு 7வது ஊதியக் குழு அமல்படுத்தப்பட்டது. 7வது ஊதியக்குழு அமைக்கப்படும்போதே ஃபிட்மெண்ட் ஃபாக்டரை (Fitment Factor) 3.68 மடங்காக உயர்த்த வேண்டும் என கோரிக்கைகள் இருந்தன. ஆனால், அப்போது அது 2.57 மடங்காகவே நிர்ணயிக்கப்பட்டது. 

8வது ஊதியக்குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 3.68 மடங்காக உயரும் என நம்பப்படுகின்றது. அதன் பின்னர் மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியம் கிட்டத்தட்ட 26,000 ரூபாயாக மாற வாய்ப்புள்ளது. இது சுமார் 44 சதவிகித ஊதிய ஊயர்வுக்கு (44 Percent Salary Hike) வழி வகுக்கும்.

8வது ஊதியக் குழு அமைக்கப்பட்ட பின்னர் ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும். ஊழியர்களுக்கான 20% முதல் 35% வரை சம்பள உயர்வு (Salary Hike) இருக்கலாம் என கூறப்படுகின்றது. லெவல் 1 ஊழியர்களின் சம்பளம் சுமார் ரூ.34,560 ஆகவும், லெவல் 18 ஊழியர்களின் சம்பளம் ரூ.4.8 லட்சமாகவும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link