மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் குட் நியூஸ்: 8வது ஊதியக்குழு அறிவிப்பு... அதிரடி ஊதிய உயர்வு

Sat, 19 Oct 2024-11:25 am,

7வது உதியக்குழுவின் கீழ், ஜூலை 2024 -க்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக 8வது ஊதியக் குழுவை அமைப்பது குறித்து மத்திய அரசு இறுதியாக ஒரு முடிவை எடுக்குமா என்ற கேள்விதான் இப்போது கோடிக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் மனதிலும் உள்ளது. இது குறித்து தற்போது ஒரு அப்டேட் வந்துள்ளது. அதை பற்றி இங்கே காணலாம்.

8வது ஊதியக்குழுவை அமைப்பது பற்றி அரசு விரைவில் முடிவெடுக்கும் என நம்பப்படுகின்றது. பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக்குழுக்கள் அமைகப்படுகின்றன. 7வது ஊதியக் குழு 2014 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. அந்த வகையில் பார்த்தால் அடுத்த ஊதியக்குழு 2026 -இல் அமலுக்கு வர வேண்டும். அதற்கான அறிவிப்பு இன்னும் சில மாதங்களில் வந்து பணிகள் துவக்கப்பட்டால்தான் அது சாத்தியமாகும். 

 

பல்வேறு பொருளாதாரக் குறிகாட்டிகள், குறிப்பாக பணவீக்கப் போக்குகளைக் கருத்தில் கொண்டு அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களில் திருத்தம் செய்ய புதிய ஊதியக் குழுவை இப்போது அரசு முன்மொழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட எதிர்பார்ப்பிக்கு பிறகு, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு (Pensioners) எதிர்பார்த்தபடி 3% அகவிலைப்படி (Dearness Allowance) வழங்கப்பட்டுள்ளது. இந்த உயர்வால், ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஊதியத்தில் டிஏ 53% ஆக உள்ளது. இந்த உயர்வு ஜூலை 1, 2024 முதல் அமலுக்கு வருகிறது. அதாவது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள் தீபாவளிக்கு முன்னதாக அக்டோபர் மாத சம்பளத்தைப் பெறும்போது மூன்று மாத நிலுவைத் தொகையையும் சேர்த்து பெறுவார்கள்.

8வது ஊதியக் குழுவை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மத்திய பட்ஜெட் 2025 இல் மத்திய அரசு அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊதியக் கமிஷன் அமைக்கப்பட்டவுடன், அதன் பரிந்துரைகளை இறுதி செய்து அதன் அறிக்கையை மையத்திடம் சமர்ப்பிப்பதற்கு சிறிது நேரம் ஆகும் என்றும், பட்ஜெட் 2025 அறிவிப்பை வெளியிடுவதற்கு ஏற்ற நேரமாக இருக்கும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். 7வது ஊதியக் குழு தனது அறிக்கையை இறுதி செய்ய 18 மாதங்களுக்கும் மேலாக எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

 

8வது ஊதியக் குழு அமைக்கப்பட்டவுடன் அவர்களது ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தில் என்னென்ன மாற்றங்கள் இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். அடிப்படை ஊதியம், கொடுப்பனவுகள் (Allowances) என அனைத்திலும் மாற்றம் ஏற்படும் என்பதால், ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் மிகப்பெரிய எற்றம் இருக்கும் என்பதில் சந்தெகமில்லை.

 

6வது ஊதியக் குழுவில் இருந்து 7வது ஊதியக்குழுவுக்கு மாறியபோது, ​​ஊழியர் சங்கங்கள் சம்பள திருத்தங்களுக்கு 3.68 ஃபிட்மென்ட் ஃபாக்டரை கொண்டு வர வேண்டும் என வாதிட்டன. எனினும், அரசாங்கம் இறுதியில் ஃபிட்மென்ட் ஃபாக்டரை 2.57 ஆகவே நிர்ணயித்தது. ஃபிட்மெண்ட் ஃபாக்டர் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களைக் கணக்கிடுவதற்கான ஒரு முக்கியமான பெருக்கியாக செயல்படுகிறது.

2.57 ஃபிட்மென்ட் ஃபாக்டர் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் மாதம் ஒன்றுக்கு ரூ.18,000 ஆக உயர்ந்துள்ளது. இது ரூ.7,000-ல் இருந்து 2.57 மடங்கு உயர்வு. அதேபோல், ஓய்வு பெற்றவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.3,500ல் இருந்து ரூ.9,000 ஆக உயர்ந்தது. கூடுதலாக, பணியாற்றும் ஊழியர்களுக்கான அதிகபட்ச சம்பளம் ரூ. 2,50,000 ஆகவும், அதிகபட்ச ஓய்வூதியம் ரூ. 1,25,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. இவை அனைத்தும் 2.57 ஃபிட்மென்ட் ஃபாக்டரை அடிப்படையாகக் கொண்டவை.

 

ஓய்வூதியம் பெறுவோர் அடுத்த ஊதியக் குழுவில் இருந்து என்ன எதிர்பார்க்கலாம் 8வது ஊதியக்குழுவின் ஃபிட்மெண்ட் ஃபாக்டரை அரசு 3.68 ஆக உயர்த்தலாம் என ஊகங்கள் உள்ளன. 8வது ஊதியக் குழுவிற்கான ஊதிய மேட்ரிக்ஸ் 1.92 என்ற ஃபிட்மென்ட் ஃபாக்டரை பயன்படுத்தி தயாரிக்கப்படலாம் என்றும் சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

 

சம்பள உயர்வு: 1.92 ஃபிட்மென்ட் ஃபாக்டரின் அடிப்படையில் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் மற்றும் குறைந்தபட்ச ஓய்வூதியம் என்னவாக இருக்கும்? தற்போது, ​​குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000 ஆக உள்ளது. இது தோராயமாக ரூ.34,560 ஆக அதிகரிக்கலாம். குறைந்தபட்ச ஓய்வூதியம் சுமார் ரூ.9,000 -இலிருந்து  ரூ.17,280 ஆக உயரலாம்.

 

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது. 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link