நயன்தாரா விக்னேஷ் சிவன் லவ் இந்த படத்திலிருந்து ஆரம்பிச்சுதா !

Tue, 22 Oct 2024-1:13 pm,

‘நானும் ரௌடி தான்’படம் 2015 அக்டோபர் 21 அன்று வெளியானது.இப்படம் விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவருக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது.இப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததால் விக்னேஷ் சிவன் நயன்தாராவை வைத்து அதிக படங்கள் மற்றும் பாடல்கள் எழுதத்  தொடங்கினார்,விக்னேஷ் சிவன் எழுதிய அனைத்துப் பாடல்களும் தமிழ் சினிமாவில் டாப் ஹிட்டில் உள்ளது.

 

நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘ நானும் ரௌடிதான்’படம் வெளியாகி இன்றுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்தது குறித்து சமூகவலைத்தளத்தில் இருவரும் பதிவிட்டிருந்தனர்.

நயன்தாரா இதுகுறித்துப் பதிவிட்டதில் இப்படம் “என் வாழ்க்கையை ஆசீர்வதிக்க வந்த படம், 9 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் வெளியான ‘நானும் ரௌடி தான்’மக்களிடமிருந்து புதிய அன்புக் கிடைத்தது, இந்த பாசம் கிடைக்கக் காரணம் விக்னேஷ் சிவன் அவருக்கு நன்றி சொல்ல வார்த்தையால் மட்டுமல்லமால் என் வாழ்க்கையிலும் நன்றி சொல்ல வேண்டும்” என இவ்வாறுப் பதிவிட்டுள்ளார்.

‘நானும் ரௌடி தான்’ படத்தில் முதன்முதலில் விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவரும் சந்திதனர். நயன்தாரா விக்னேஷ் சிவனை முதலில் காதலிக்கத் தொடங்கியப் படம் ‘நானும் ரௌடி தான்’ இப்படம் விக்னேஷ் சிவன் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய பிள்ளையார் சுழிப் போட்டது என்றேக் கூறலாம்.

நயன்தாரா விக்னேஷ் சிவன் காதல் முதலில் இந்த படத்தில்தான் தொடங்கியது.இருவருக்கும் இதிலிருந்துதான் காதல் தொடங்கியது. ஏன் இந்த படத்தில் நயன்தாரா விக்னேஷ் சிவனை காதிலிக்கத் தொடங்கினார்.

 

விக்னேஷ் சிவன் பிரபலமாகக் காரணம் நயன்தாரா மட்டுமில்லை,அவர் இயக்கிய ‘நானும் ரௌடி தான்’ விக்னேஷ் சிவன் இயக்குநர் மற்றும் பாடல் எழுத்தாளர். ‘நானும் ரௌடி தான்’ படத்தில் அனைத்துப் பாடல்களும் விக்னேஷ் சிவன் நயன்தாரா மீதுள்ள காதலை வெளிப்படுத்தும் விதத்தில் இந்தப் படத்தின் பாடல்களை எழுதியுள்ளார்.

நயன்தாரா விக்னேஷ் சிவன் லவ் ரொம்பவே டிரெண்டிங்.நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவருக்கும் இரட்டை குழந்தைகள் உள்ளன. இத்தனை வருடங்களாக சமூகவலைத்தளம் பயன்படுத்தாமல் இருந்த நயன்தாரா சமீபத்தில் குழந்தை வந்தப் பிறகு  நயன்தாரா முதலில்  தன் இரு குழந்தைகளை கையில் வைத்து நடந்து வரும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்தார்.

 

நயன்தாரா இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்த சில நிமிடங்களிலே பல மில்லியன் ரசிகர்கள் நயன்தாரவை பின் தொடர ஆரம்பித்தனர்.இதனைத் தொடந்து நயன்தாரா தொடர்ந்து விக்னேஷ் சிவன் மற்றும் அவர்களின் இரட்டை குழந்தைகளுடன் வெளியில் டிரிப் செல்லும்போது அங்கு எடுக்கும் போட்டோஸ் வீடியோப் பதிவிட்டு ரசிகர்களை தன்வசம் கொண்டுவரத் தொடங்கினார். இதில் நயன்தாரா  மிகவும் பிரபலமாக தொடங்கினார். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link